ராணுவ வீரர்கள் ஐவர் பலியானது விபத்தல்ல:- குண்டு வீச்சே காரணம்!

 ரவி ஜார்ஜ்,

 ராணுவ வீரர்கள் ஐவர் பலியானது விபத்தல்ல, அதற்கு குண்டு வீச்சே காரணம் என்கிற அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது.

   ஜம்மு காஷ்மீரில் ராணுவ வாகனம் தீப்பிடித்து எரிந்ததில் ஐந்து வீரர்கள் பலியாகினர். ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள பிம்பர் காளி என்ற இடத்தில் ராணுவ வாகனம் ஒன்று திடீரென தீப்பிடித்தது. தீ வேகமாக பரவி வாகனம் முழுவதும் எரிந்தது. இந்த கோர விபத்தில் ஐந்து ராணுவ வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

 மேலும் சிலர் படுகாயம் அடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 அப்படியிருக்க, ராணுவ வாகனம் தீப்பிடித்து எரிந்தது என முதல் கட்ட தகவல் வெளியாகி இருந்த நிலையில், தற்போது பயங்கரவாதிகள் கையெறி குண்டு வீசியதில் தான் ராணுவ வாகனம் தீ பிடித்துள்ளது என  ராணுவம் கண்டறிந்துள்ளது.

 மேலும்  இந்த தாக்குதலில் காயம் அடைந்த வீரர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கபட்டுள்ளனர். இதுதொடர்பாக ராணுவ தளபதி மனோஜ் பாண்டே, பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங்குக்கு விரிவாக எடுத்துரைத்ததோடு மேலும் அங்கு விசாரணை நடைபெற்று வருகிறது.