ஆன்லைன் வகுப்பின்போது ஆபாசமாக குறுஞ்செய்தி! மாணாக்கள் மறியல்!

செ.ஜான்மரிய ஜோசப்,
ஆன்லைன் வகுப்பின்போது ஆபாசமாக குறுஞ்செய்தி அனுப்பியதாகவும், ஆபாச புகைப்படம் ஏதாவது இருந்தால் அவற்றை தனக்கு அனுப்பும்படி வற்புறுத்துவதாகவும் ஆசிரியர் ஒருவர் மீது மாணவ, மாணவிகள் புகார் கூறினர்.
இதனைத்தொடர்ந்து, கோவை வெள்ளலூர் அரசு பள்ளி கணினி ஆசிரியருக்கு எதிரான மாணவ, மாணவிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அப்போது சம்மந்தப்பட்ட காமுக ஆசிரியர் செல்போன் வாயிலாக அனுப்பப்பட்ட குறுஞ்செய்தியை ஆதாரமாக வைத்து அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், அவரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.
இந்நிலையில் மாணவர்களிடம் பள்ளி நிர்வாகமும், போலீசாரும் பேச்சுவார்த்தை நடத்தினர். பள்ளி நிர்வாகம் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்போவதாக கூறப்பட்டதாம்.