பெண்கள் குளிப்பதை படம் பிடித்து ஆண் நண்பருக்கு அனுபியவர் சிக்கினார்!

பெண்கள் குளிப்பதை படம் பிடித்து ஆண் நண்பருக்கு அனுபியவர் சிக்கினார்!

  வ.மகேசு,

  இராமநாதபுரம் மாவட்டம், கமுதியை சேர்ந்தவர் ஆஷிக் (31). இளநிலை மருத்துவம்(எம்.பி.பி.எஸ்.) படித்து முடித்துவிட்டு கமுதியில் உள்ள முஸ்லீம் பஜாரில் கிளினிக் ஒன்றை நடத்தி வருகிறார். இவருக்கு திருமணமாகி 3 ஆண்டுகள் ஆகிறது. இவருக்கு காளீஸ்வரி என்பவர் பெண் நண்பராக இருந்து வருகிறார்.

  மதுரை அண்ணாநகரில் உள்ள தனியார் பெண்கள் விடுதியில் தங்கி மதுரையில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் பி.எட் படித்து வருகிறார். அதற்காக அவர் பெண்கள் விடுதியில் தங்கி படித்து வருகிறார்.

 இந்நிலையில், விடுதியில் உள்ள மற்ற பெண்கள் குளிப்பது, உடை மாற்றுவது உள்ளிட்ட வீடியோ மற்றும் புகைப்படங்களாக எடுத்து ஆஷிக்கிற்கு அனுப்பி வந்துள்ளார்.

  காளீஸ்வரி புகைப்படம் எடுப்பதை பார்த்த பெண் ஒருவர் விடுதி காப்பாளரிடம் புகார் கூறியுள்ளார். அவரது செல்போனை பறித்து ஆராய்ந்ததில் பல பெண்களின் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் அதில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

   உடனே விடுதி மேலாளர், மதுரை அண்ணாநகர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார். விசாரணையில் காளீஸ்வரி அந்த வீடியோக்களை மருத்துவர் ஆஷிக்கிற்கு அனுப்பியது உறுதி செய்யப்பட்டது இதனால், ஆஷிக் மற்றும் மாணவி காளீஸ்வரி ஆகியோரை சைபர் க்ரைம் போலீசார் கைது செய்தனர்.

 சமீபத்தில் பஞ்சாபில் உள்ள சண்டீகர் பல்கலைகழக கல்லூரி விடுதி ஒன்றில் மாணவி ஒருவர் சக மாணவிகள் குளிப்பதை வீடியோ எடுத்து ஆண் நண்பருக்கு அனுப்பிய சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில் அதே பாணி ஒரு சம்பவம் இராமநாதபுரத்திலும் நடந்துள்ளது.