முதியவரை தாக்கிய ரவுடிகளின் வீடியோ! நடவடிக்கை எடுக்காத போலிஸ்!

நெல்சன்,

  அறுபத்து ஐந்து வயதுடைய ஒரு முதியவர் தன் குடும்ப வறுமையின் காரணமாக செக்யூரிட்டி வேலை பார்த்து வருகிறார். அவரை நான்கந்து ரவுடிகள் அடித்து கீழே தள்ளிவிட்டு சென்றுள்ளனர். இது தொடர்பான சிசிடிவி ஆதாரங்களுடன் புகார் தெரிவித்தும் கூட போலிஸ் ஸ்டேஷனில் நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லையாம்.

இது பற்றின விவரம் வருமாறு,

வேலூரில் ஐடாஸ்கடர் சாலையில் சிஎம்சி மருத்துவமனைக்கு எதிரில் தனியார் பெட்ரோல் பங்க் ஒன்று செயல்பட்டு வருகிறது.

அங்கு இளவரசன் என்பவர் செக்யூரிட்டியாக வேலை பார்த்து வருகிறார். அவருக்கு வயது 65.

அந்த வகையில் அவர் இன்று (16.07.2022) பிற்பகல் பணியில் இருந்த போது நான்கைந்து பேர் டூ வீலரில் பெட்ரோல் பங்கினுள் நுழைந்து அங்கிருந்த முதியவர் இளவரசனை அடித்து கீழே தள்ளி சரமரியாக தாக்கினார்கள். இதனால் அவருக்கு வாயில் காயம் ஏற்பட்டு ரத்தம் வழிந்தது. அந்த அடாவடி ரவுடிகளை தடுக்க சென்றவர்களுக்கும் அடி விழுந்தது.

  நிலைதடுமாறி கீழே விழுந்த முடியவரை தொடர்ந்து தாக்கினர். இது குறித்து வேலூர் அண்ணாசாலையிலுள்ள வடக்கு காவல் நிலையத்துக்கு தகவல் சென்றது. பின்னர் முடியவரை ஸ்டேஷனுக்கு அழைத்துச்சென்று விசாரிப்பதாக கூறி அவரை அங்கேயே காக்க வைத்தனரே தவிர, ரவுடிகளை பிடிக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

  சமீபகாலமாக வேலூர் பகுதியில் எந்த தாக்குதல் சம்பவம் நடந்தாலும், அடிபட்டவர் காவல் நிலையங்களில் புகார்களை கொடுத்துவிட்டு நடையாய் நடந்து கொண்டிருக்கிறார்கள்.

   தயவு செய்து முதியவர் இளவரசன் தாக்கப்பட்ட சம்வத்தையும் அப்படி விடவேண்டாமே ப்ளீஸ்.