தொடர்சிச்சியாக கைபற்றப்படும் கஞ்சா!

தொடர்சிச்சியாக கைபற்றப்படும் கஞ்சா!

கு.அசோக்,

  ரயிலில் கடத்தி வரப்பட்ட 4 கிலோ கஞ்சா மற்றும் பேருந்தில் கடத்தி சென்ற 8 கிலோ கஞ்சா என மொத்த 12 கிலோ கஞ்சா பறிமுதல் 3 பேர் கைது

 வேலூர்மாவட்டம், காட்பாடி ரயில் நிலையத்தில்,  காட்பாடி  ரயில்வே காவல் நிலைய ஆய்வாளர் சித்ரா தலைமையில் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் ஜெயக்குமார் மற்றும் தனிப்பிரிவு காவலர் முத்துவேல் ஆகியோர் இன்று 4-வது பிளாட்பாரத்தில் சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்கள்.

  அப்போது ஹைதா - பெங்களூர் வரை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில்  சோதனை நடத்திய போது லக்கேஜ் வைக்கும் ரேக்கில்  இருந்த கருப்பு பேக்கில் 4 பண்டல்களில் சுமார்  - 04  கிலோ கஞ்சா இருந்தது  இதனையடுத்து   விசாரணை செய்ததில்    மகேஷ் (28 ) , கர்நாடகா மாநிலம் மண்டியா,  என விசாரணையில் தெரிய வந்தது மேலும் விசாரணை செய்ததில் எதிரி கிருஷ்ணராஜபுரத்திலிருந்து ஒடிசா  மாநிலம் கெசிங்கா சென்று கஞ்சா வாங்கி மீண்டும் கிருஷ்ணராஜபுரம் செல்வதாக  கூறியவரை கைது செய்தனர்

 இதே போன்று காட்பாடி கிறிஸ்டியான்பேட்டை சோதனை சாவடியில் காவல்துறையினர் அரசு பேருந்து ஒன்றில் சோதனை செய்ததில் பையில் 8 கிலோ கஞ்சா இருந்ததை கைப்பற்றி ஒரு ஆண் மற்றும் பெண்ணை கைது செய்து லத்தேரி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

 காட்பாடி மொத்தம் 12 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.