செல்போன் கடையில் ரூ.4. 45லட்சம் கள்ள நோட்டு! பழைய தலைவனின் கைவரிசையா?

கு.அசோக்,
வேலூரில் செல்போன் கடையில் கள்ளநோட்டு கொடுத்து ஏமாற்றி செல்போன் வாங்க முயன்றவர்கள் தப்பியோட்டம் கள்ளநோட்டு கட்டு ரூ.4. 45லட்சம் சாலையில் வீசி சென்றனர் - கள்ள நோட்டு கும்பல் தலைவனின் கைவரிசையா?காவல்துறையினர் விசாரணை.
வேலூர் மாவட்டம்,வேலூர் பழைய பேருந்து நிலையம் அருகிலுள்ள காமராஜர் சிலை அருகில் உள்ள தனியார் செல்போன் கடை ஒன்றில் இரண்டு நபர்கள் புதியதாக செல்போன் ஒன்றை வாங்க வந்துள்ளனர்.
கடைக்காரரும் செல்போனை காண்பித்து அவர்களிடம் பணத்தை வாங்கி எண்ணிய போது அது கள்ள ரூபாய் நோட்டு என கண்டுபிடித்தார்.
இதனை அறிந்த அந்த இரண்டு மர்ம நபர்களும் கடையை விட்டு வேகமாக வெளியேறி, மேலும் அவர்களிடமிருந்த கள்ள ரூபாய் நோட்டுக்களை சாலையில் வீசி விட்டு எஸ்கேப் ஆனார்கள்.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் சாலையில் வீசப்பட்டிருந்த ரூ.2 ஆயிரம் மற்றும் ரூ.500 அடங்கிய கள்ள நோட்டுகளை பறிமுதல் செய்து எண்ணிப்பார்த்தனர்.
அப்போது அதில் ரூ.4.45லட்சம் இருந்தது, அவை அனைத்தும் கலர் ஜெராக்ஸ் எடுக்கப்பட்டிருந்தது
இதுகுறித்து வேலூர் வடக்கு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து, இது காட்பாடியை தலைவனாக கொண்ட கும்பலின் கைவரிசையா? அல்லது ஆந்திர கள்ளநோட்டு கும்பல் நடமாட்டமா என விசாரித்து வருகின்றனர்.
குறிப்பு:-கள்ள நோட்டு பிசினஸில் பல கோடிகளை சுருட்டிய அதன் தலைவன் தற்போது பல்வேறு கட்சிகளுக்கு தாவி தாவி பாதுகாப்பு தேடிக் கொண்டிருக்கிறானாம்.