நடிகைக்கு பணமோசடி தொடர்பான சம்மன் !

நடிகைக்கு பணமோசடி தொடர்பான சம்மன் !

K.Mugil

    பணமோசடி வழக்கு தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகுமாறு நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸிக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. பாலிவுட் பிரபல நடிகையான அவர் சுகேஷ் சந்திரசேகர் மற்றும் அவரது நடிகர்-மனைவி லீனா பால் ஆகியோ செய்த பணம் மோசடி தொடர்பாக சாட்சியம் அளிக்க அழைக்கப்படுவதாக கூறப்படுகிறது.

ஃபோர்டிஸ் ஹெல்த்கேர் விளம்பரதாரர் சிவிந்தர் சிங்கின் குடும்பத்தை சுமார் 200 கோடி மோசடி செய்ததாக சந்திரசேகர் மற்றும் பால் ஏற்கனவே டெல்லி போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

 இந்நிலையில் டெல்லியில் உள்ள அலுவலகத்தில் வரும் 18 ம் தேதி விசரணைக்கு ஆஜராகும்படி நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸிக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் சம்மன் அனுப்பியுள்ளனர்.

  இந்த வழக்கில் சாட்சியாக ஏற்கனவே ஜாக்குலின் விசாரிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.