காட்பாடி டால்பின் டவரில் கொலை? பாண்டிச்சேரி எம்.எல்.ஏ. பரபரப்பு பேட்டி!

ஜி.சாந்தகுமார்,
வேலூர் மாவட்டம், காட்பாடியில் டால்பின் டவர்
என்கிற பெயரில் வணிகவளாகம் ஒன்று உள்ளது. தற்போது அங்கு ஒரு கொலை சம்பவம் நடந்துள்ளது. இந்நிலையில் இந்த கொலையை மூடி மறைக்க பார்ப்பதாக பாண்டிச்சேரி சட்டமன்ற உறுப்பினர் வைத்தியநாதன் செய்தியாளர்கள் பேட்டியில் சொன்னார்.
அதேபோல் விசாரணை நடத்தி பிரேதபரிசோதனை அறிக்கையின் பிறகு உரிய நடவடிக்கை எடுக்கபடும் - மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணா பேட்டியளித்துள்ளார்
இது பற்றின விவரம் வருமாறு,
வேலூர்மாவட்டம்,வேலூர் காட்பாடியில் பாண்டிச்சேரி லாஸ்பேட்டை பகுதியை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் சரவணன் (51)என்பவர் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.காந்தி நகர் கிழக்கு பகுதியிலுள்ள டால்பின் டவர் என்கிற கட்டிடத்தின் படிகட்டு அருகே உடல் கண்டெடுக்கப்பட்டது.
இவர் தமிழகம் முழுவதும் நிலங்களை வாங்கி அதனை வீட்டுமனையாக பிரித்து விற்பனை செய்யும் சரவணா ரியஸ் எஸ்டேட் குரூப் ஆப் கம்பெனியை நடத்தி வருகிறார்.
இதில் வேலூர் மாவட்டத்தில் ஒரு இடத்தில் நிலத்தை வாங்கியுள்ளார், அந்த இடத்தை விற்றவர் அவருக்கு பதிவு செய்து தராததால் பணத்தை திருப்பி கேட்டுள்ளார் சரவணன்.
அப்படியிருக்க, நேரில் பேசிகொள்ளலாம் என நேற்று மாலை காட்பாடி வட்டதிலுள்ள அரசியல் கட்சி ஒன்றின் மாநில பொறுப்பாளர் அலுவலகத்துக்கு அழைத்து வரப்பட்டிருக்கிறார்.
அதன் பின்னர் அவரை டால்பின் டவருக்கு அழைத்துச்சென்றதாக தெரிகிறது. பின்னர் இரவு ரியல் எஸ்டேட் அதிபர் சரவணன் மர்மமான முறையில் வாயிலும் மூக்கிலும் ரத்தம் வந்த நிலையில் இரவு படிக்கெட்டில் இறந்துள்ளார்.
இதுகுறித்து விருதம்பட்டு காவல்துறையினர் சந்தேகமரணமாக வழக்குபதிவு செய்து உடலை கைப்பற்றி அடுக்கம்பாறை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில் இந்த மர்ம மரணம் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணா நேரடியாக விசாரணையை துவங்கியுள்ளார்
இதுகுறித்து பாண்டிச்சேரி சட்டமன்ற உறுப்பினர் வைத்தியநாதன் செய்தியாளர்களிடம் கூறுகையில் சரவணை அவர்கள் நிலம் வாங்கியதில் பணத்தை திருப்பி அளிப்பதாக கூறி அழைத்துள்ளனர். அதனை நம்பி சரவணன் வேலூர் வந்துள்ளார், ஆனால் கார் ஓட்டுநரை ஒரு இடத்தில் இறக்கி அனுப்பி விட்டனர்.
பின்னர் சரவணனை இரவு முழுவதும் துன்புறுத்தி கையொப்பம் பெற்றுள்ளனர். 2021 ஆண்டு பத்திரத்தில் 2020 ஆம் ஆண்டு பணம் கொடுத்தது போல் எழுதி பெற்றி டாக்குமென்ட் தயாரித்துள்ளார்கள்.
இந்த திட்டமிட்ட கொலையில் அரசியல் கட்சியை சேர்ந்த பிரமுகர் உள்ளிட்டவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
ஆக இதில் அரசியல் பின்னனி உள்ளதால் இதனை காவல்துறை சரியான கோணத்தில் விசாரிக்கவில்லை என குற்றம்சாட்டினார்
இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ராஜேஷ் கண்ணா இ.கா.ப. செய்தியாளர்களிடம் கூறுகையில் ரியல் எஸ்டேட் அதிபர் மர்மமான முறையில் டால்பின் டவர்ஸ் பில்டிங்கில் இறந்துகிடந்தார்.
இதுகுறித்து நாங்கள் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளோம். உடற்கூறு ஆய்வு முடிந்த பின்னர் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல் கண்காணிப்பாளர் கூறினார்.
குறிப்பு:-இறந்த சரவணனின் உடலை பிரேத பரிசோதனைக்கு பின்னர் பாண்டிச்சேரி சட்டமன்ற உறுப்பினர் பெற்று சென்றார். அப்போது அவர் தெரிவிக்கையில் இறந்து போன சரவணன் மது அருந்தவில்லை என்றும் மாடியிலிருந்து விழவில்லை என்றும் மருத்துவர்கள் சொன்னதாக கூறினார்.