கோழியை உயிருடன் உரித்து கொலை செய்த வாலிபர் கைது!
கே.ஏ.ஜெகதீஷ்வரி,
கோழியை உயிருடன் உரித்து கொலை செய்த வாலிபர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
இறைச்சிக் கடைகளில் கோழியின் தலையை துண்டித்து உயிர் போன பிறகு தோல் உரிக்கப்பட்டு இறைச்சி துண்டுகளாக வெட்டப்படுவது வழக்கம்.
ஆனால் கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளை அருகே செங்கவிளையை சேர்ந்த மனு என்ற வாலிபர்,கோழியின் இறகுகளையும், அதன் தோலையும், உயிருடன் துடிக்க துடிக்க உரித்து போஸ் கொடுத்துள்ளார்.
இப்படி கோழியை கொலை செய்த காட்சியை கஷ்டமர் தனது மொபைல் போனில் பதிவு செய்து வெளியிட்டுவிட்டார்.
கூடவே, எந்த மனவருத்தமும் இரக்கமே இல்லாமல் மிகவும் குரூரமாக சிரித்துக்கொண்டே மகிழ்ச்சியுடன் இந்தக் கொடூரத்தைச் செய்ய எப்படி மனம் வந்தது.
கோழி கதறி அழுவதும், துடி துடிப்பதும் உனக்கு உரைக்கவில்லையா?அவர் மீது கால்நடை பராமரிப்புத்துறையினர் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் கோரிய நிலையில் பாறசாலை போலீசார் அவரை கைது செய்துள்ளனர்.