ராஜிவ் கொலைவழக்கு:- முருகனுக்கு லீவு கேட்டு நளினி சிறைத் துறைக்கு கடிதம்!

ராஜிவ் கொலைவழக்கு:- முருகனுக்கு லீவு கேட்டு நளினி சிறைத் துறைக்கு கடிதம்!

ஜி.கே.சேகரன்.

சிறையில் உள்ள முருகனுக்கு ஆறு நாள் அவசர கால விடுப்பு கேட்டு சிறைத் துறைக்கு நளினி கடிதம். முருகனின் பரோல் விடுப்பு தொடர்பாகவும் விடுதலை தொடர்பாகவும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்ய இருப்பதாக வழக்கறிஞர் பேட்டி.

 வேலூர்மாவட்டம்,முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக பெண்கள் தனிச்சிறையில் இருந்த நளினிக்கு தற்போது பரோலில் வந்துள்ளார்.

   இந்நிலையில் 5 ஆவது முறையாக பரோல் நீட்டிக்கப்பப்பட்ட நளினி தனது தாய் பத்மாவுடன் காட்பாடி அடுத்த பிரம்மபுரத்தில் தங்கியுள்ளார்.

  இதனையடுத்து நளினியின் வழக்கறிஞர் புகழேந்தி இன்று மாலை நளினியை சந்தித்து பேசினார். முன்னதாக அவர் வேலூர் ஆண்கள் மத்திய சிறையில் உள்ள முருகனையும் சந்தித்து பேசினார்.

  பின்னர் வழக்கறிஞர் புகழேந்தி அளித்த பேட்டியில்,பேரறிவாளனை உச்சநீதிமன்றம் விடுதலை செய்ததை அடுத்து 6 பேரை விடுதலை செய்வது தொடர்பாக தமிழக அரசு கடந்த வாரம் ஆலோசனை நடத்தியது.

  ஒரு வாரம் கடந்த நிலையில் அது குறித்த எந்த அறிவிப்பும் வெளியாகாததால் 6 பேரின் விடுலை தாமதமாக வாய்ப்புள்ளதால் நளினியின் கணவர் முருகனுக்கு 6 நாள் அவசர கால பரோல் விடுப்பு வழங்க கோரி நனிளி சிறை துறைக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

  அதே போல் முருகனின் பரோல் விடுப்பு தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் 1-ஆம் தேதி மனு தாக்கல் செய்ய உள்ளோம். 6 -ஆம் தேதி அதே சென்னை உயர்நீதிமன்றத்தில் முருகனின் விடுதலை தொடர்பாக மனு தாக்கல் செய்ய உள்ளதாகவும் நளினியை சந்தித்த பின் வழக்கறிஞர் புகழேந்தி கூறினார்.