ஸ்டெர்லைட் சுமதி பங்கேற்க இருந்த ஹலோ எப்.எம்.நிகழ்ச்சி இரத்து!மக்கள் எதிர்ப்புகாட்டியதால் பரபரப்பு!!

ம.பா.கெஜராஜ்,
ஸ்டெர்லைட் நிறுவன துணைத் தலைவர் சுமதி பங்கேற்கும் திருநெல்வேலி ஹலோ எப். எம். நேர்காணல் நிகழ்ச்சிக்கு பொதுமக்களிடமிருந்து எழுந்த மிகப்பெரிய எதிர்ப்பை அடுத்து அந்த நிகழ்வு ரத்து செய்யப்பட்டது.
மேற்படி நிகழ்ச்சிகுறித்து அதே எப். எம் ரேடியோவில் தொடர் விளம்பரம் செய்யப்பட்ட நிலையில் மக்கள் கொதித்தனர்.
ஆகவே ஸ்டெர்லைட் ஆதரவு நிகழ்சியை ஒட்டு மொத்த தூத்துக்குடி/தமிழக மக்களும் சமூக வலைதளங்களில் எதிர்ப்பு தெவித்தனர். நூற்றுக்கணக்கானோர் நேற்று இரவிலிருந்து இன்று காலை வரை ஹலோ எப்.எம்ன் நிர்வாகத்தை தொடர்பு கொண்டு, தங்களது கடும் கண்டங்களையும் விதவிதமாக காட்டினர்.
இப்படி எழுப்பப்பட்ட கடும் எதிர்ப்பால் இன்று ஒளிபரப்பப்பட இருந்த ஸ்டெர்லைட் தொடர்பான நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது.
இது குறித்த ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு சார்பில் ஹரிராகவன் என்பவரிடம் பேசினோம்.
ஸ்டெர்லைட் ஆலை சார்பில் அதன் துணைத்தலைவர் சுமதி என்பவர் பங்கேற்கும் நிகழ்ச்சியை அந்த ரேடியோ நிகழ்ச்சியில் அரை மணி நேரமோ ஒரு மணி நேரமோ ஒலிபரப்புவதாக செய்தியை பரப்பினார்கள்.
இதற்கு மக்களிடமிருந்து இதற்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியது.
இந்த எதிர்ப்புக்காக நாங்க ஒரு நோட்டிஸ் கூட ஸ்டெர்லைட்டுக்கு எதிரா வழங்க முடியவில்லை சார். அவ்வளவு பேரும் கண்காணிப்பில் இருக்குறாங்க. சில நேரங்களில் போலிசே போன் பண்ணிக்கூட எச்சரிக்குறாங்க சார்.
ஸ்டெர்லைட் ஆலை மூடிகிடக்குது ஆதரவாளர்களும் எதிர்பாளர்களும் ஒன்னும் செய்யக்கூடாது என்று இருதரப்புக்கும் தடை போடனும்.
இங்க ஆதரவாளர்கள் நிகழ்ச்சி பன்ண எந்த இடத்திலும் தடை இல்லைங்க. புத்தகம் கொடுக்கறது, கல்வி கடன் கொடுக்கறது, மரம் நடறது போன்ற நிகழ்ச்சிகளை கைக்கூலிகளை வச்சுக்கிட்டு செய்யறாங்க.
ஆகவே, தமிழக அரசு கொள்கை முடிவெடுத்தும், அரசாணை பிறப்பித்தும் மற்றும் சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பின் மூலமும் மூடப்பட்டுள்ள இந்த உயிர்க்கொல்லி ஆலைக்கு ஆதரவாக ரேடியோ, நாளிதழ், தொலைக்காட்சி மற்றும் இணையதளங்களில் ஒளிபரப்பப்படும் விளம்பரங்களை தடை செய்யுமாறும் கோரிக்கை வைக்கிறோம்.
மேலும், இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுத்த தமிழக அரசுக்கும், நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்களுக்கும் மற்றும் மாவட்ட நிர்வாகத்திற்கும், தென் மண்டல காவல்துறை ஐஜி அவர்களுக்கும் தூத்துக்குடி மற்றும் தமிழக மக்களின் நெஞ்சார்ந்த நன்றி தெரிவிக்க கடமைப் பட்டிருக்கிறோம் என்று சொன்னார்.