தனித் தொகுதியில் பட்டியலினத்தவர்கள் அவதி!

ரகுராமன்,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை சட்டமன்ற தொகுதி (தனி) உட்பட்ட வாலிபட்டி ஊராட்சியில் வாழ்ந்து வந்த பட்டியலினத்தவர்களுக்கு மின்வசதி, குடிநீர் வசதி, சாலை வசதி ஏதும் செய்து கொடுக்காமலும், ஊராட்சி சுடுகாடுருகே புதர்மண்டிய சுற்றுசூழலில் சிறுகுழந்தைகளுடன் விஷ ஜந்துகளுக்கிடையை வாழ்வேண்டிய நிலையில் அவர்களை ஊராட்சி மன்ற தலைவர் கொடுமை படுத்துகிறாராம்.
ஊராட்சியில் சுமார் இருபத்தி ஆறு ஏக்கர் புறம்போக்கு நிலங்கள், இருப்பதாகவும்,
அதில் மேற்படி பிரிவினர் பயன்பாட்டில் 50 வருட காலமும் இருந்த இரண்டரை ஏக்கர் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்ததாக கூறி ஊராட்சி மன்றத் தலைவரும் மேலாதிக்கத்தினரும் விரட்டியடித்துள்ளனர்.
ஆனால் மேலதிக்கத்தினர் ஆக்கிரமித்துள்ள மீதம் உள்ள இருபத்தி நான்கு ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தாமல் விட்டுவைத்திருக்கிறார்கள்.
இது தொடர்பாக வாழ்வாதாரம், பாதிப்பதாக கூறி பாதிக்கப்பட்ட சமூகத்தினர் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லையாம்.
ஒரு வழியாக புகார் குறித்து விசாரிக்க வந்த காவல் துணைக் கண்காணிப்பாளரின் காலில் விழுந்த ஒரு மூதாட்டி, தான் பயன்படுத்திவந்த 30 சென்ட் நிலத்தையும் பிடுங்கிக் கொண்டனர் அய்யா அதை மீட்டுத்தாருங்கள் என்று கதறியுள்ளார்.
ஊத்தங்கரை தனி சட்டமன்ற தொகுதி என்பது குறிப்பிடத்தக்கது.