காப்பக நிர்வாகிகளுடன் நெல்லை காவல் ஆணையாளர்!

காப்பக நிர்வாகிகளுடன் நெல்லை காவல் ஆணையாளர்!

கே.ஏ.ஜெகதீஷ்வரி

நெல்லை மாநகர காவல் ஆணையாளர் அவர்கள் தலைமையில் முதல் முறையாக அனைத்து காப்பக நிர்வாகிகளுடன் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

 நெல்லை மாநகர காவல் ஆணையாளர் முனைவர் என்.கே.செந்தாமரைக் கண்ணன் இ.கா.ப அவர்கள் தலைமையில் கலந்தாய்வுக்கூட்டம் நடத்தப்பட்டது.

 நெல்லை மாநகர பகுதிகளில் செயல்பட்டு வரும் பெண்குழந்தைகள், சிறுவர்கள், ஆதவற்றோர்கள், மாற்றுத்திறனாளிகள், முதியோர்கள் மற்றும் நோய்வாய்ப்பட்டவர்களுக்கு என  மொத்தம் 17 காப்பகத்தில் இருந்து வந்த நிர்வாகிகள் மற்றும் அதிகாரிகளுடன் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் காப்பகத்தில் தங்கியுள்ளவர்களின் விபரங்களை கேட்டறிந்து, காப்பகங்களுக்கு தேவையான உடை, பாதுகாப்பு, தண்ணீர் வசதி, விளையாட்டு உபகரணங்கள், கணினி வசதி, போர்வைகள் படுக்கை வசதி, மற்றும் பொருளாதாரம் போன்ற குறைகளை கேட்டறிந்தனர்.

  அணைத்து குறைகளையும் நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் ஆணையாளர் அவர்கள் உறுதியளித்தார்கள்.

   இக்கூட்டத்தில் நெல்லை மாநகர சட்டம் மற்றும் ஒழுங்கு காவல் துணை ஆணையாளர் திரு.டி.பி.சுரேஷ்குமார் அவர்கள், நெல்லை மாநகர சி.டபிள்யூ.சி. கூடுதல் காவல் துணை ஆணையாளர் திரு.சங்கர், நுண்ணறிவு பிரிவு காவல் உதவி ஆணையாளர் திரு.நாகசங்கர், நுண்ணறிவு பிரிவு காவல் ஆய்வாளர் திரு.பிறைச்சந்திரன், குழந்தைகள் நல தலைவர் திரு.சந்திரகுமார், நெல்லை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் திரு.ரமேஷ் அவர்கள், ஏ.சி.டி.சி. காவல் ஆய்வாளர் திருமதி.ஆன்டனி ஜெகதா, டவுன் மற்றும் பாளை அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் ஆய்வாளர்கள் திருமதி.முத்துலட்சுமி மற்றும் திருமதி.ராமேஸ்வரி ஆகியோர் கலந்து கொண்ண்டனர்.

  பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் நடப்பதை தடுப்பது பற்றியும், குற்றங்கள் நடந்தால் செயல்பட வேண்டிய நடவடிக்கைள் பற்றியும் ( உதவி எண் : 1098 )  என்ற எண் குறித்த விழிப்புணர்வை வாசகங்களை வழங்கினார்கள்.