குடியாத்தமும் டிராப்பிக்கில் சிக்கியது!

குடியாத்தமும் டிராப்பிக்கில் சிக்கியது!

  கு.அசோக்,  

  தரைப்பாலம் தண்ணீரில் மூழ்கியது - இரண்டு கிலோமீட்டர் போக்குவரத்து நெரிசல் - ஆந்திரா கர்நாடகா செல்ல முடியாமல் வாகன ஓட்டிகள் அவதி - பள்ளி பேருந்துகள் மற்றும் பள்ளி மாணவர்கள் பள்ளிக்கு செல்ல முடியாமல் போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொண்டு அவஸ்த்தை.

  வேலூர் மாவட்டம், வேலூர் நகரைப் போலவே குடியாத்தமும் டிராப்பிக்கில் சிக்கியது.  குடியாத்தம் அடுத்த மோர்தனா அணையில் இருந்து சுமார் ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருவதால் கவுண்டன்ய ஆற்றின் தரைப்பாலம் தண்ணீரில் மூழ்கியது.

  இதனால் அவ்வழியே போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

  இந்த சாலை ஒரு வழிப்பாதை என்பதால், அதற்கு மாற்றாக காமராஜர் பாலம் வழியாக வாகனங்கள் செல்வதால்  இரண்டு கிலோ மீட்டர் தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

   குடியாத்தம் வழியாக ஆந்திரா மாநிலம் குப்பம், கர்நாடகா மாநிலம் கேஜிஎப், கோலார், பெங்களூர் போன்ற பகுதிகளுக்கு செல்லும் வாகனங்கள் மற்றும் பேருந்துகள் நெரிசலில் சிக்கிக் கொண்டு தவித்தனர்.

 மேலும், போக்குவரத்து நெரிசலால் பள்ளி மாணவர்கள் பள்ளிக்கு செல்ல இரண்டு கிலோமீட்டர் தூரம் நடந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. பள்ளி பேருந்துகளும் போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொண்டு பள்ளிக்கு செல்ல முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.