நார் தொழிற்சாலை  திடீரென நள்ளிரவு தீ!

 நார் தொழிற்சாலை  திடீரென நள்ளிரவு தீ!

G.K.Sekaran,

நாட்றம்பள்ளி அருகே நார் தொழிற்சாலை  திடீரென நள்ளிரவு தீ பற்றி எரிந்தது. தீயணைப்பு துறையினர்  போராடி தீயை அணைத்தனர் இதனால் சுமார் 50 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் தீயில் கருகி நாசமானது.

 திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி அடுத்த மல்லப்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் செந்தில் குமார் (வயது 45) இவர் அதே பகுதியில் கடந்த 3  வருடங்களாக நார் தொழிற்சாலை நடத்தி வருகிறார். இந்த தொழிற்சாலையில் வட மாநிலத்தினர் உள்ளிட்ட தொழிலாளிகள்  பணிபுரிந்து வருகின்றனர்.

  இந்நிலையில்  நேற்று இரவு நார் தொழிற்சாலை திடிரென தீ பற்றி  எரிந்தது இதனால் உரிமையாளர் உடனடியாக நாட்டறம்பள்ளி மற்றும் திருப்பத்தூர் தீ அணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

   தகவலின் பேரில் நாட்டறம்பள்ளி தீயணைப்பு நிலைய அலுவலர் ரமேஷ் தலைமையில் தீயணைப்பு வீரர்கள்  சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுப்பட்டனர் அதன் பிறகு திருப்பத்தூர் தீயணைப்பு துறையினர் வாகனமும் சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்று  போராடி தீயை அணைத்தனர்.

  இதனால் நார் தொழிற்சாலை இருந்த நார் மற்றும் சுமார் 50 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமானது இரவு நேரத்தில் மர்ம ஆசாமிகள் யாரோ தீ வைத்து இருக்கலாம் என கோணத்தில் நாட்டறம்பள்ளி போலிசார் விசாரணை செய்து வருகின்றனர்.

  மேலும் தீ விபத்து இரவு நேரத்தில் ஏற்பட்டதால்  தொழிலாளிகள் வேலை செய்ய வில்லை இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இதனால் நாட்டறம்பள்ளி பகுதியில் பரபரப்பு காணப்பட்டது.