விவசாயிகளின் அனுபவ இடத்தை அமுக்க பார்க்கும் சமூக விரோதிகள்!

விவசாயிகளின் அனுபவ இடத்தை அமுக்க பார்க்கும் சமூக விரோதிகள்!

 கு.அசோக், 

  இராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அடுத்த அனந்தலை கிராம பகுதியில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

  அப்பகுதி மக்களுக்கு பிரதான தொழிலாக விவசாயமே இருந்து வருகிறது. இந்த நிலையில் அப்பகுதி சேர்ந்த விவசாயிகள் தங்களுக்கு சொந்தமான விவசாய நிலத்திற்கு மத்தியில் உள்ள சுமார் 7 ஏக்கர் அரசுக்கு சொந்தமான புறம்போக்கு இடமானது இருப்பதாகவும், கடந்த பல ஆண்டுகளாக அந்த புறம்போக்கு நிலம் மற்றும் அவழியாக செல்லக்கூடிய நீரோடை கால்வாய் பகுதிகளை அனைத்து விவசாயிகளும்  பயன்படுத்தி வந்துள்ளதாக கூறப்படுகிறது.

  இந்த நிலையில் அப்பகுதியை சேர்ந்த நபர்கள் நீரோடை கால்வாய் வழி மற்றும் அரசுக்கு சொந்தமான புறம்போக்கு இடத்தினை ஆக்கிரமிப்பு செய்து இருப்பதாக தெரிகிறது.

  மேலும் கிராமத்தில் இருக்கும் நபர்கள் நீரோடை பாதையில் இருக்கும் வழியை விடாமல் அரசுக்கு சொந்தமான இடத்தை தொடர்ந்து ஆக்கிரமிப்பு செய்ததுடன் அந்த கிராமத்தில் இருக்கும் விவசாயிகளை மிரட்டி வருவதாக கூறப்படுகிறது.

  இதன் காரணமாக விவசாயிகள் தங்களது விளை நிலங்களில் விளையக்கூடிய விவசாய பொருட்களை கொண்டு செல்வதற்கோ அல்லது விளை நிலங்களில் பயன்படுத்தக்கூடிய மூலப் பொருட்களை கொண்டு செல்வதற்கோ முடியாமல் கடும் சிரமத்திற்கு உள்ளாகி இருப்பதாக தெரிவிக்கின்றனர்.

   மேலும் இந்த  பிரச்சனைகள் சம்பந்தமாக பல அதிகாரிகளை சந்தித்தும் அவர்களிடம் பலமுறை மனு அளித்தும்   இதனால் வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

 இதனால் கிராமத்தில் உள்ள  விவசாயிகள் ஆவேசமடைந்து அரசுக்கு சொந்தமான புறம்போக்கு இடம் மற்றும் நீரோடை பாதை ஆகியவற்றை ஆக்கிரமிப்பு செய்துள்ள நபர்களிடமிருந்து மீட்டு கிராம விவசாயிகளின் பயன்பாட்டிற்காக வழங்க வேண்டும் என தெரிவித்து புகார் மனுக்களை கைகளில் ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

  மேலும் உடனடியாக மாவட்ட நிர்வாக அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து அரசுக்கு சொந்தமான இடம் மற்றும் நீரோட பாதையை மீட்டு விவசாயிகளுக்கு பயனுள்ள வகையில் வழங்க வேண்டும் என கோரிக்கையாக முன் வைத்துள்ளனர்.