தார் தொழிற்சாலை அமைக்க கூடாது! ஆட்சியரிடம் புகார்!

கு.அசோக்,
பேர்ணாம்பட்டு அருகே சுற்றுசூழலை பாதிக்கும் தனியார் தார் மற்றும் ஜல்லி கற்கள் தயாரிக்கும் தொழிற்சாலைக்கு அனுமதியளிக்க கூடாது என கோரி பல்வேறு கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் மற்றும் கிராம மக்கள் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தர்ணா ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
வேலூர் மாவட்டம், பேர்ணாம்பட்டு அருகேயுள்ள ராஜக்கல் கிராமம் கல்லேரி மலையில் ரெட்டிமாங்குப்பத்தை சேர்ந்த ஆர்,டி.எஸ். என்ற தனியார் தார் மற்றும் ஜல்லி கலவை தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்க ஆய்வுகள் செயப்பட்டது.
இங்கு ஜல்லி கற்கள் மற்றும் தார்சாலை அமையபெற்றால் விவசாயம் கடுமையாக பாதிக்கபடும் குடிநீரும் மாசடைந்து நிலத்தடி நீரும் பாதிக்கும் மேலும் மக்களுக்கு ஆஸ்துமா, புற்றுநோய் உள்ளிட்ட வியாதிகளும் ஏற்படும் சுற்றுசூழலும் கடுமையாக பாதிக்கும் என கூறி ராஜாக்கல், மேல்கொத்தகுப்பம்,வடமலைபுரம்,சங்கராபுரம்,பன்னீர் குட்டை உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த நூற்றுக்கணக்கான மக்கள் வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தனர்.
அங்கு தர்ணாவில் ஈடுபட்டு ஜல்லி மற்றும் தார் சாலைக்கு அனுமதியளிக்க கூடாது என மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியனிடம் மனுவினை அளித்தனர்.