யூரியாவுக்கும் கலைநிகழ்ச்சிதான்!

யூரியாவுக்கும் கலைநிகழ்ச்சிதான்!

 கு.அசோக்,

 போளிப்பாக்கம் கிராமத்தில் வேளாண் விழிப்புணர்வு கூட்டம் மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.

 ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த போளிப்பாக்கம் கிராமத்தில்  விவசாயிகளுக்கு நானோ யூரியா  குறித்து விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி  நடைபெற்றது.

   இதில்  தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவரும் பாமக கிழக்கு மாவட்ட தலைவருமான அ.ம.கிருஷ்ணன் தலைமை ஏற்று நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார்.இதில் நடைபெற்ற கலை நிகழ்ச்சியில்  அனைத்து பயிர்களுக்கு மேல் உரமாக யூரியா பயன்படுத்தப்பட்டு வருகிறது என்பதை எடுத்துரைத்தனர்.

 மேலும் நானோ யூரியா திரவம் 500 மில்லி லிட்டர் ஒரு மூட்டை யூரியாவிற்கு இணையான பயண் தரும், நானோ யூரியா திரவம் இலை வழியாக ஊடுருவி இலை முதல் வேர் வரைக்கும் சென்று தழைசக்தியினை  அளிக்கிறது, மண் மற்றும் நீர் மாசடையாமல் சுற்றுச்சூழலை பாதுகாத்து மகசூலை அதிகரிக்கிறது.

   இதனால் விவசாயி லாபம் பெறலாம் கலை நிகழ்ச்சி வாயிலாக விழிப்புணர்வு  ஏற்படுத்தினார்கள்.

   இதில் ஊராட்சி மன்ற தலைவர் கார்த்திக், திமுக முன்னாள் ஒன்றிய செயலாளர் செல்வம் சங்க  நிர்வாகிகள் விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.