திருவள்ளுவர் பல்கலை நிர்வாகம் மீது 420 பக்க ஊழல் புத்தகம்! மறுப்பு தெரித்த நிர்வாகம்!

ஜி.கே.சேகரன்,
திருவள்ளுவர் பல்கலைக்கழக முறைகேடுகள் குறித்து தங்களுக்கு எதுவும் தெரியாது திருவள்ளூவர் பல்கலைக்க்ழக பதிவாளர் செந்தில் வேல்முருகன் பேட்டி
வேலூர்மாவட்டம், சேர்க்காட்டில் தமிழக அரசின் திருவள்ளூவர் பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. இதன் கட்டுபாட்டில் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூ£,¢ திருவண்ணாமலை ஆகிய மாவட்ட கல்லூரிகள் செயல்பட்டு வருகிறது,
இந்நிலையில் பல்கலைக்கழகத்தின் தில்லுமுல்லுகள் என்ற 420 பக்கம் அடங்கிய புத்தகத்தை வெளியிட தொழிலாளர்கள் ஒன்று கூடினார்கள் ஆனால் நூலை வெளியிட போலிசார் தடை விதித்ததால் அவர்கள் கலைந்து சென்றனர்.
இதுகுறித்து திருவள்ளூவர் பல்கலைக்கழக பதிவாளர் செந்தில் வேல்முருகன் செய்தியாளர்களிடம் கூறுகையில் ஊழல்கள் நடந்ததும் முறைகேடுகள் நடந்ததும் தகவல் தங்களுக்கு தெரியாது. இப்பல்கலைகழகம் மாணவர்கள் கல்வி மேம்பாடு அடைய துவங்கப்பட்டது. இந்த ஆண்டு இப்பல்கலைக்கழகத்தில் புதியதாக பாடபிரிவுகளையும் துவங்கியுள்ளோம்.
மாணவர்களின் எண்ணிகையும் அதிகப்படுத்தியுள்ளோம் ஊழல்கள் குறித்த குற்றச்சாட்டுகள் எங்களுக்கு வரவில்லை. தொழிலாளர்கள் பிரச்சனை நீதிமன்றத்தில் உள்ளது. அரசாங்கம் அறிவுரையின் படி செய்வோம் தன்னிப்பட்ட நபர்களே இந்த ஊழல் குற்றச்சாட்டை கூறியுள்ளனர்.
மாணவர்கள் நலனை சார்ந்து ஏற்படுத்தப்பட்டது இப்பல்கலைக்கழகம், அரசாங்கம் எதிர்பார்ப்புக்கு ஏற்ப வளர்ச்சி அடைய செய்வோம், தேர்வுமுடிவுகள் குளறுபடிகளும் மறுதேர்வுக்கும் காரணம் வினாத்தாள் சரியாக தயாரிக்காதது தான் காரணம், அந்த பேராசிரியருக்கு வாழ்நாள் தடை விதித்துள்ளோம்.
அவர் பழைய வினாதாளை மீண்டும் அப்படியே தேர்வுக்கு பயன்படுத்தியதே மறுதேர்வுக்கு காரணம். அனைத்து சான்றிதழ்களும் உடனுக்குடன் மாணவர்கள் பெறும் வகையில் நடவடிக்கை எடுத்து வருகிறோம். இணைய வழி விடைத்தாள் திருத்துவதால் முறைகேடு என்பதில்லை இது அரசு எடுத்த முடிவு தான் இதில் எந்த முறைகேடும் நடக்காது. மாணவர்கள் நலன் சார்ந்த கல்வி நிறுவனம் முன்பு கூடுவதை காவல்துறை தடுப்பது அவர்களின் கடமையாகும் காவல்துறைக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது என சொன்னார்.