அரசாங்க டிராக்டரில் மணல் திருட்டு:-ஊராட்சிமன்ற தலைவரின் அட்டூஷியம்!

அரசாங்க டிராக்டரில் மணல் திருட்டு:-ஊராட்சிமன்ற தலைவரின் அட்டூஷியம்!

 ஜி.கே.சேகரன்,

 விரிஞ்சிபுரம் ஊராட்சிமன்ற தலைவர் அரசு டிராக்டரை பயன்படுத்தி ஆற்றில் மணல் கொள்ளை மக்களே வாகனத்தை சிறைபிடித்து காவல்நிலையத்தில் ஒப்படைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

  வேலூர்மாவட்டம், விரிஞ்சிபுரம் ஊராட்சிமன்ற தலைவராக இருப்பவர் குணசுந்தரி, இவரும் இவரது கணவர் பாலசுந்தரமும் இணைந்து ஊராட்சி மன்ற பயன்பாட்டிற்காக வழங்கப்பட்ட அரசு டிராக்டரில் தொடர்ந்து பாலாற்றில் மணல் கொள்ளை அடித்து அவர்களுக்கு சொந்தமான பாக்கிய லட்சுமி பன்னையில் பதுக்கி வைத்துள்ளனர்.

  இவ்வாறு அரசுவிதிகளை மீறி மணல் திருட்டில்  திமுகவை சேர்ந்த குணசுந்தரி பாலசுந்தரம் ஈடுபடுவது குறித்து பல முறை காவல்துறைக்கும் அதிகாரிகளுக்கும் தகவல் கொடுத்தும் பலன் இல்லை.

  இதனால் ஆத்திரமடைந்த விரிஞ்சிபுரம் கிராம மக்கள் அரசு டிராக்டரை பயன்படுத்தி பாலாற்றில் மணல் கொள்ளையடித்து சென்றதை பிடித்து டிராக்டரை மணலுடன் லத்தேரி காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.

  மேலும் இதுகுறித்து வட விரிஞ்சிபுரம் கிராம நிர்வாக அலுவலர் அம்மாயி சட்டத்திற்கு புறம்பாக அரசு டிராக்டரை பயன்படுத்தி பாலாற்றில் மணல் கொள்ளையில் ஈடுபட்டவர்களை கைது செய்ய கோரி லத்தேரி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்

   ஊராட்சி மன்ற தலைவர் குணசுந்தரியும் அவரது கணவரும் அரசு டிராக்டரை சட்டத்திற்கு புறம்பாக பயன்படுத்தி மணலை திருடி டிராக்டரை பறிமுதல் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது இதுகுறித்து லத்தேரி காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.