ஹெல்மெட் போட்டுக்கொண்டு வாகனம் ஓட்டிக்காட்டிய போலிசார்! ஆட்சியர் -எஸ்.பி.முன்பு நிகழ்ச்சி!

ஹெல்மெட் போட்டுக்கொண்டு வாகனம் ஓட்டிக்காட்டிய போலிசார்! ஆட்சியர் -எஸ்.பி.முன்பு நிகழ்ச்சி!

 கு.அசோக்,

  இராணிப்பேட்டை சாலைபாதுகாப்பு விழிப்புணர்வு இருசக்கர வாகன பேரணி ஆட்சியர் துவங்கி வைத்தா£.¢

இராணிப்பேட்டை மாவட்டம்,  மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக போக்குவரத்து அலுவலகம் சார்பாக சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த பேரணியை மாவட்ட ஆட்சித் தலைவர் வளர்மதி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிரண் சுருதி ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர். 

 அப்போது, இருசக்கர வாகன ஓட்டிகள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகளை துண்டு பிரசுரமாக வாகன ஓட்டிகளிடம் 18 வயதுக்குட்பட்ட சிறார் எவரும் எந்த வாகனத்தையும் ஓட்டக்கூடாது, இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து வரும்போது 4 வயதிற்கு மேல் தலைக்கவசம் அணிந்து வர வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

   இந்தப் பேரணி சிப்காட் இ எஸ் ஐ வழியாக சிப்காட் வரை சென்றது, இதில் காவலர்கள் ஹெல்மெட் அணிந்து கொண்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.  பின்பு நான்கு சக்கர லோடு ஆட்டோவிற்கு பின்புறம் சிவப்பு நிற ஸ்டிக்கர் ஒட்டினார்கள். இந்த நிகழ்ச்சியின் போது வட்டார போக்குவரத்து அலுவலர் ராமலிங்கம் போக்குவரத்து இன்ஸ்பெக்டர்கள் சிவகுமார் செங்குட்டு வேல் மற்றும் ஓட்டுநர் பயிற்சி பள்ளி உரிமையாளர்கள் போக்குவரத்து அலுவலர்கள் பொதுமக்கள்  ஏராளமானோர் பங்கேற்றனர்.

திருப்பத்தூர்,

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேசிய சாலை பாதுகாப்பு மாதம் குறித்து விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் துவக்கிவைத்தனர்.

 திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், வட்டார போக்குவரத்து துறை சார்பில் தேசிய சாலை பாதுகாப்பு மாதம் குறித்து விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் மற்றும் திருப்பத்தூர் எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆகியோர் கொடி அசைத்து துவக்கி வைத்தனர்.

  இதில் தலைக்கவசம் அணிவது, சாலை விதிகளை முறையாக கடைபிடிக்க வேண்டும் உள்ளிட்ட  விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டது. இந்த விழிப்புணர்வு பேரணி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் துவக்கி திருப்பத்தூர் நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நிறைவு பெற்றது.

  இதில் மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி, வட்டார போக்குவரத்து அலுவலர் காளியப்பன், வட்டார போக்குவரத்து ஆய்வாளர் விஜயகுமார் மற்றும் கல்லூரி மாணவர்கள், காவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.