நாட்டுக்கோழி பண்ணைகள் அமைக்க லோன்!

உ.சசிக்குமார்,
திருப்பத்தூர் மாவட்டத்தில் 2023-24 ஆம் ஆண்டிற்கான சிறிய அளவிலான நாட்டுக்கோழி பண்ணைகள் (250 கோழிகள் / அலஞ அமைத்திட மூன்று அலகுகள் குறியீடாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
திட்டத்திற்கு பயனாளியாக தேர்ந்தேடுக்கப்படுபவர்களுக்கு கோழி கொட்டகை கட்டுமான செலவு, உபகரணங்கள் வாங்கும் செலவு மற்றும் நான்கு மாதங்களுக்கு தேவையான தீவன செலவு மொத்த செலவில் 50% மானியம் ரூ.150625 மாநில அரசால் வழங்கப்படும்.
மீதமுள்ள 50% பங்களிப்பு வங்கி மூலமாகவோ அல்லது தனது சொந்த ஆதராங்கள் மூலமாகவோ பயனாளிகள் திரட்டப்பட வேண்டும்.
பயனாளிகள் அந்த கிராமத்தில் நிரந்தரமாக வசிப்பவராக இருக்க வேண்டும். கோழி கொட்டகை கட்ட குறைந்தபட்சம் 625 சதுர அடி நிலம் இருக்க வேண்டும். அந்த பகுதி மனித குடியிருப்புகளிலிருந்து விலகி இருக்க வேண்டும். விதவைகள், ஆதரவற்றோர், திருநங்கைகள், மாற்றுதிறனாளிகள் மற்றும் தாழ்த்தப்பட்ட/ பழங்குடியனிவருக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
விருப்பமுள்ள மற்றும் பொது மக்கள் தங்களது ஆதார் அட்டை நகல், பண்ணை அமையவிருக்கும் சிட்டா / அடங்கல் நகல், 50% தொகை அளிப்பதற்கான ஆதார் ஆவணங்கள் (வங்கி இருப்பு விவரம் / வங்கி கடன் ஒப்புதல் விவரம்) மூன்று வருடத்திற்கு பண்ணையை பராமரிப்பதற்கான உறுதிமொழி, 2022-23 ஆம் ஆண்டிற்கான நாட்டுக்கோழி வளர்ப்பு திட்டத்தின் கீழ் பயனடையவில்லை என்பதற்கான சான்றுடன் விண்ணப்பித்தினை அருகாமையில் உள்ள கால்நடை மருந்தகங்களில் 23.06.2023 க்குள் சமர்பித்திடுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.தெ.பாஸ்கரபாண்டியன்,இ,ஆ,ப., அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திருப்பத்தூர் மாவட்டம்.