நீங்க என்ன மறுப்பது:-செந்தில் பாலாஜி இலாகா இல்லா மந்திரி தான் - அரசாணை வெளியீடு!

ம.பா.கெஜராஜ்,
கவர்னர் அய்யா, நீங்க என்ன மறுப்பது:-செந்தில் பாலாஜி இலாகா இல்லா மந்திரி தான் என்று தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீட்டு பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இது பற்றின விவரம் வருமாறு,
சட்ட விரோதமான பணம் பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் உள்ள செந்தில் பாலாஜி அமைச்சராகவே தொடர்கிறார். ஆனால் அவருக்கு இலாகா ஏதும் கிடையாது.
இது குறித்து தமிழக அரசு அரசாணை வெளியீட்டுள்ளது.
ஏற்கனவே, செந்தில் பாலாஜியை இலாகா இல்லாத அமைச்சராக நீடிப்பது தொடர்பான பரிந்துரையை ஆளுநர் ஏற்க மறுத்துவிட்டார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முடிவு செய்து கவர்னருக்கு நேற்று முன் தினம் கடிதம் அனுப்பினார். அதில் மின்சாரத் துறையை அமைச்சர் தங்கம் தென்னரசுக்கும், மது விலக்கு ஆயத்தீர்வை துறையை அமைச்சர் முத்துசாமிக்கும் கூடுதலாக அளிப்பதாக பரிந்துரையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டிருந்தார். அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உடல்நிலை சரியில்லாததால் இலாகா இல்லாத அமைச்சராக தொடருவார் என்றும் அதில் குறிப்பிட்டிருந்தார்.
ஆனால், செந்தில் பாலாஜியை இலாகா இல்லாத அமைச்சராக நீடிப்பது தொடர்பான பரிந்துரையை ஆளுநர் ஏற்க மறுத்து அரசின் நிலைபாட்டுக்கு முட்டுக்கட்டை போட்டார்.
அதை கண்டு கொள்ளாத தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடருவார் என தெரிவித்துள்ளது.
இந்நிலையில் செந்தில் பாலாஜிக்கு காவேரி மருத்துவமனையில் 7 வது தளத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சூழலில் அந்த தளத்தை அமலாக்க துறை அதன் கைபிடிக்குள் கொண்டு வந்திருக்கிறது.
மேலும் மத்திய அரசின் கட்டுபாட்டுக்குள் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையின் மருத்துவக்குழு இன்று செந்தில் பாலாஜியை பரிசோதிக்கக்கூடும் என கூறப்படுகிறது.