ஒரே குடும்பத்தில் இருவர் விண்ணப்பித்தனரா? ஆட்சியர்!!

ஒரே குடும்பத்தில் இருவர் விண்ணப்பித்தனரா? ஆட்சியர்!!

 கு.அசோக்,

ஆட்சியர் அலுவலகத்தில் மகளிர் உரிமை தொகைக்கு மீண்டும் ஆர்வமுடன் விண்ணப்பம் அளித்த பெண்கள்.

   வேலூர்மாவட்டம், வேலூ£,¢ சத்துவாச்சாரியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கடந்த செப்டம்பட் 15 ஆம் தேதி முதல்வர் தமிழக முழுவதும் மகளிர்களுக்கு மாதம் ரூ.1000 உரிமை தொகை வழங்கும் திட்டம் தமிழக முதல்வர் ஸ்டாலினால் துவங்கி வைக்கப்பட்டது. இதனை அடுத்து முதல்வர் அவர்கள் யாருக்கு உரிமை தொகை வரவில்லையோ அவர்கள் மீண்டும் விண்ணப்பகலாம் என கூறியதை அடுத்து இன்று குடியாத்தம் கேவிகுப்பம்,காட்பாடி அனைக்கட்டு வேலூர் ஆகிய பகுதிகளை சேர்ந்த மகளிர்கள் சத்துவாச்சாரியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேரில் வந்து மீண்டும் மகளிர் உரிமை தொகைக்கு விண்ணப்பத்தை அளித்தனர்.

இதனை வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்

  பின்னர் ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் கூறுகையில் உரிமை தொகை கிடைக்கபெறாதவர்கள் வருகின்றனர் அவர்களின் மனுக்கள் இன்னும் கள ஆய்வுக்காக வைக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் அவர்களுக்கு உரிமை தொகை வர வாய்ப்புள்ளது.

 இதனை பெற ஒரே குடும்பத்தில் இருவர் விண்ணப்பித்தனரா என்ற சந்தேகத்திலும் வழங்கபடாமல் இருந்திருக்கலாம் அரசின் காரணங்களால் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்ட காரணங்களையும் சொல்கிறோம்.

 இது போல் மனுக்கள் நிலையை சரிபார்க்கின்றனர், குடியாத்தம் வட்டாட்சியர் அலுவலகத்தில் அதிக அளவு மகளிர்கள் விண்ணப்பிக்கின்றனர். அரசு வழிகாட்டுதலின் படி என்ன காரணத்தால் அவர்களுக்கு வரவில்லை என்பதையும் குறித்து வைத்துள்ளோம். அரசின் சார்பில் அப்பில் செய்ய சொல்லியுள்ளனர் அதன்படி மனுக்களை பெற்று அரசுக்கு அனுப்பி வைப்போம் என கூறினார்.