பட்டதாரிகளுக்கு அரசு வேலை:- திருப்பத்தூர் ஆட்சியர் அறிவிப்பு!

பட்டதாரிகளுக்கு அரசு வேலை:- திருப்பத்தூர் ஆட்சியர் அறிவிப்பு!

 டி.முகமது,

 தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்டத்தின் கீழ் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள கொத்தடிமைகளை மீட்டெடுத்து அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் கொத்தடிமைகள் மீட்டெடுப்பு சிறப்பு குழுக்கள் அமைக்கும் பொருட்டு மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் 1 பணியிடமும் , தொகுப்பு அளவிலான ஒருங்கிணைப்பாளர்  - 4 பணியிடங்களும் நிரப்பிட , கீழ்க்காணும் தகுதியுடைய நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

பணிக்காலம் ஓராண்டிற்கு மட்டும், மாவட்ட அளவிலான திட்ட ஒருங்கிணைப்பாளர்களுக்கான தகுதிகள் :

  1. இளநிலைப்பட்டபடிப்பு மற்றும் 3 முதல் 5 வருட இலக்கு மக்களை மேம்படுத்தும் பணியில் முன் அனுபவம் இருக்க வேண்டும்.
  2. மாவட்ட அளவில் பிற துறைகளுடன் ஒருங்கிணைந்து பணிபுரிய எதுவாக, தகவல் தொடர்பு திறன் கொண்டவராக இருக்க வேண்டும்.
  3. திருப்பத்தூர் மாவட்டத்தை சார்ந்தவராக இருக்க வேண்டும்.
  4. இருசக்கர வாகனம் மற்றும் வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றவராக இருக்க வேண்டும்.
  5. TNSLRM மற்றும ; PVP கொத்தடிமைகள் மீட்டெடுப்பு திட்டத்தில் பணிபுரிந்த நபர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

தொகுப்பு:- அளவிலான ஒருங்கிணைப்பாளர்களுக்கான தகுதிகள்:

  1. கொத்தடிமைகள் குடும்பத்தை சார்ந்த அல்லது இருளர் வகுப்பைசார்ந்தவராக இருக்க வேண்டும்.
  2. குறைந்தது 8 - ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

 திருப்பத்தூர் மாவட்டத்தில் விண்ணப்பங்களை 01.08.2022 அன்று மாலை 5.00 மணிக்குள் புதிய மாவட்ட ஆட்சியரக கட்டிடத்தின் முன்றாவது தளத்தில் அமைத்துள்ள மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க அலுவலகத்தில் ஒப்படைக்கவும்,மேலும் தாமதமாக வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என ஆட்சித்தலைவர் திரு.அமர்குஷ்வாஹா,இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.  விண்ணப்பம் அனுப்பவேண்டிய முகவரி : திட்ட இயக்குநர் , தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் ( மகளிர் திட்டம் ) , மாவட்ட இயக்க மேலாண்னம் அலகு , மூன்றாவது தளம் " C " பிரிவு மாவட்ட ஆட்சியரகம் திருப்பத்தூர் . செய்தி வெளியீடு : செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் , திருப்பத்தூர் .