அட்ஜெஸ்மென்டுக்கு ஒத்துவராததால் விரட்டியடிப்பு! கலெக்டர் ஆபிசில் தர்ணா!

அட்ஜெஸ்மென்டுக்கு ஒத்துவராததால் விரட்டியடிப்பு! கலெக்டர் ஆபிசில் தர்ணா!

ஜி.கே.சேகரன்,

வாணியம்பாடி நகராட்சி ஆணையர் கொடுத்த பாலியல் துன்புறுத்தல் காரணமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தர்ணாவில் ஈடுபட்ட பெண்கள்

  திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நாடார் காலனி பகுதியைச் சேர்ந்த சிவகுமார் மனைவி நந்தினி (34) இவர் வாணியம்பாடி நகராட்சியில் டெங்கு தடுப்பு பணியாளராக சுமார் ஏழு வருடங்களாக பணிபுரிந்து வருகிறார்.இந்த நிலையில் வாணியம்பாடி நகராட்சி ஆணையராக சில மாதங்களுக்கு ஸ்டாலின் பாபு பொறுப்பேற்றுள்ளார்.

  அதனைத் தொடர்ந்து நகராட்சி ஃபீல்ட் அசிஸ்டன்ட் சரவணன் என்பவர் தினமும் நகராட்சி ஆணையரின் வீட்டு வேலைகளை செய்து கொடுக்குமாறு வற்புறுத்தி வந்ததாக தெரிகிறது.

  இதன் காரணமாக நந்தினி யாருடைய வீட்டிற்கும் செய்ய வேண்டிய வேலை எனக்கு இல்லை எனக் கூறி தட்டி கழித்து வந்துள்ளார்.

 இதன் காரணமாக நகராட்சி ஆணையர் ஸ்டாலின் பாபு பல்வேறு பணிகளை செய்ய துன்புறுத்தி உள்ளார். மேலும் தனக்கு அட்ஜஸ்ட்மென்ட் செய்து கொள் என்று கூறியும் பாலியல் ரீதியாக துன்புறுத்தி உள்ளார்.

  இதன் காரணமாக நந்தினி அவருடைய கணவருக்கு நடந்ததை கூறியதன் காரணமாக சிவகுமார் நகராட்சி ஆணையரிடம் இது குறித்து கேட்டுள்ளார். அதன் பின்பு நந்தினியை கடந்த 23ஆம் தேதி முதல் வேலைக்கு வர வேண்டாம் என நகராட்சி ஆணையர் ஸ்டாலின் பாபு கூறியுள்ளார்.

  அட்ஜஸ்ட் செய்தால் மட்டுமே வேலைக்கு வர முடியும் என்று கூறி தொந்தரவும் செய்துள்ளார்.இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறி இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திடீர் என தர்ணாவில் ஈடுபட்டார்.

 அவரைப் போலவே, வாணியம்பாடி அடுத்த பெரிய பேட்டை பகுதியைச் சேர்ந்த சத்துணவு ஊழியர் பிரேமா என்பவரையும் ஆபாச வார்த்தைகளால் திட்டி உள்ளார் எனக்கூறி  நந்தினி மற்றும் பிரேமா ஆகிய இருவரும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தர்ணாவில் ஈடுபட்டனர்.

இதனால் சிறிது நேரம் அப்பகுதியில் பரபரப்பு காணப்பட்டது.