போலிஸ் ஸ்டேஷன் எதிரில் உள்ள அகழியில் திட்டமிட்ட கொலை!

ஜி.கே.சேகரன்
கோட்டை அகழியில் மூட்டையில் கட்டப்பட்ட நிலையில் பிணம் ஒன்று மிதப்பதாக வந்த தகவலின் அடிப்படையில் போலீசார் பிணத்தை பார்வையிட்டு அகழியில் இருந்து பிணத்தை மீட்டனர். சினிமா பாணியில் நடந்துள்ள கொலை சம்பவத்தை தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் மற்றும் டிஎஸ்பி திருநாவுக்கரசு ஆகியோர் நேரில் விசாரணை.
வேலூர்மாவட்டம், வேலூர் கோட்டை அகழியில் சினிமா பாணியில் ஆண் ஒருவரை யாரோ எங்கேயோ கொலை செய்து அந்த சடலத்தில் கல்லை கட்டி போட்டு முழுவதுமாக துணியை சுற்றி அகழியில் வீசிவிட்டு சென்றுள்ளனர். இந்த நிலையில் அந்த சடலமானது இந்த அழுகிய நிலையில் தண்ணீரில் மிதந்தது, இதுகுறித்து வேலூர் வடக்கு காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
மேலும், சம்பவ இடத்தில் வேலூர் தீயணைப்புத்துறையினர் மற்றும் பொது மக்களின் உதவியோடு அகழி நீரில் மிதந்த அந்த சடலத்தை மீட்டனா. சம்பவ இடத்தில் வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நெ.மணிவண்ணன்,இ.க.ப அவர்கள் ஆய்வு செய்தார்.
உடன் துணை காவல் கண்காணிப்பாளர் திருநாவுக்கரசு தலைமையிலான காவல்துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனா.¢ வேலூர் வடக்கு காவல்துறையினரும் கொலைகுறித்து விசாரித்து வருகின்றனர்.
இந்த ஆணை யாராவது கடத்தி வந்து கொலை செய்து உடலை இங்கு வீசி சென்றனரா கொலையானவர் எந்த மாவட்டத்தை சேர்ந்தவர் முன் விரோதம் காரணமா அல்லது வேறு எதாவது காரணமா? காணாமல் போனவர்கள் யார் என ஏதாவது புகார்கள் வந்துள்ளனவா என போலீசார் விசாரித்து வருகின்றனர். இறந்தவரின் வலது கரத்தில் ஆங்கிலத்தில் கே.எஸ் சித்ரா என்றும் அதன் கீழே மற்றொரு பெயரும் பச்சை குத்தப்பட்டிருந்தது.
மோப்ப நாய் சாரா வரவழைக்கப்பட்டு கோட்டை மைதானத்தின் சில பகுதிகளில் சென்று பின்னர் தொடரமுடியாமல் நின்றது.
மாநகரின் மத்திய பகுதியில் உள்ள வடக்கு காவல் நிலையத்தில் இருந்து சில நூறு மீட்டர் தூரத்திலேயே இந்த திட்டமிட்ட கொலை நடந்துள்ளது. குறிப்பாக கொலை செய்து, துணி மற்றும் கயிற்றால் சுற்றி அகழியில் வீச நேரம் பிடித்திருக்கும். இப்படி சாவகாசமாக நடந்த கொலை உடல் மிதந்த பின்னரே தெரியவந்துள்ள நிலையில் மக்கள் அச்சம் அடைந்திருக்கிறார்கள்.