இரயிலில் கடத்தி வரப்பட்ட 38 கிலோ கஞ்சா பறிமுதல்! இருவர் கைது!

இரயிலில் கடத்தி வரப்பட்ட 38 கிலோ கஞ்சா பறிமுதல்! இருவர் கைது!

 ஜி.கே.சேகரன்,

   ஜோலார்பேட்டை இரயில்வே நிலையத்தில் இரயிலில் கடத்தி வரப்பட்ட 38 கிலோ கஞ்சா பறிமுதல்! இருவர் கைது!

  திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை ரயில்வே நிலையத்தில் தமிழக அரசு தடை செய்யப்பட்ட கஞ்சா பொருட்கள் ஏதேனும் கடத்தப்படுகிறதா என ரயில்வே போலீஸார் தீவிர சோதனையில் ஈடுபடுவதுண்டு.

 இந்த நிலையில் திருச்சி ரயில்வே மாவட்டத்தைச் சேர்ந்த சிறப்பு காவல் போலீசார் ஜோலார்பேட்டை ரயில்வே நிலையத்தில் வரும் ரயில்களில் சோதனை மேற்கொண்டனர்.

  அப்போது ஹட்டியாவில் இருந்து எஸ்வந்த்பூர் செல்லும் ரயிலில் பொது ஜனப்பட்டியில் கடத்தி வரப்பட்ட 38 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். கடத்தலுக்கு காரணமான

கேரள மாநிலத்தைச் சேர்ந்த அல்தாஃப் எம் நசீர் (20) மற்றும் ஜட்லீ(22) என்ற இரண்டு இளைஞர்களை இருப்பு பாதை போலீசார் கைது செய்தனர்.

 பின்னர் அதை ஜோலார்பேட்டை இருப்பு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.