நடிகர் விஜய் பெயரில் களம் கண்ட காளைக்கு முதல் பரிசு!

நடிகர் விஜய் பெயரில் களம் கண்ட காளைக்கு முதல் பரிசு!

  ஜி.கே.சேகரன்,

ஆம்பூர் அருகே வெகுவிமர்சையாக நடைப்பெற்ற எருது விடும் விழா200க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்பு.

  திருப்பத்தூர் மாவட்டம்ஆம்பூர் அடுத்த நரியம்பட்டு கிராமத்தில் 32 ஆம் ஆண்டு எருது விடும் விழா நடைப்பெற்றது, இவ்விழாவை  வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் பிரேமலதா, ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் வில்வநாதன் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். இந்த எருது விடும் விழாவில் வேலூர், ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி, ஆந்திர மாநிலம் குப்பம், போன்ற பல்வேறு பகுதிகளிலிருந்து 200க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன.

 கால்நடை மருத்துவர்களின் உரிய பரிசோதனைக்கு பின்னர் காளைகள் வாடி வாசல் வழியாக அவிழ்த்து விடப்பட்டது. பின்னர் குறிப்பிட்ட இலக்கை குறைந்த மணித் துளிகளில் கடந்த விஜய் என்கிற காளைக்கு 1 லட்சம் ரூபாயும், இரண்டாம் பரிசாக 85 ஆயிரம் ரூபாயும், மூன்றாவது பரிசாக 75 ஆயிரம் ரூபாய் என மொத்தம் 40 பரிசுகள் வழங்கப்பட்டது.

 மேலும் இந்த எருது விடும் விழாவை காண பல்வேறு பகுதிகளிலிருந்து பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர்.