டி.ராஜேந்தர் திடீர் மயக்கம்!

டி.ராஜேந்தர் திடீர் மயக்கம்!

கே.ஏ.ஜெகதீஸ்வரி,

 பல்வேறு அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் தென் தமிழகத்தை முகாமிட்டு நிவாரணம் பொருட்கள் வழங்கும் அளவுக்கு கனமழையின் தாக்கம் அங்கு ஏற்பட்டிருக்கிறது.

 இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டம் லெவிஞ்சிபுரத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கிக் கொண்டு இருந்த இயக்குனர் டி.ராஜேந்தர் திடீரென மயக்கம் அடைந்தார். இதையடுத்து அங்கிருந்தவர்கள் அவரது முகத்தில் தண்ணீர் தெளித்து ஆசுவாசப்படுத்தினர். இதையடுத்து அவரை நிர்வாகிகள் அழைத்துச் சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

 ஏற்கனவே அவருக்கு இருதய அறுவை சிகிச்சை நடத்தப்பட்டிருக்கும் நிலையில் மருத்துவர்கள் அவரை ஓய்வில் இருக்க அறிவுரை வழங்கியிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.