காவல்துறையினர் முன்னிலையில் மோதிக்கொண்ட வணிகர் அமைப்புகள்!

காவல்துறையினர் முன்னிலையில் மோதிக்கொண்ட வணிகர் அமைப்புகள்!

கு.அசோக்,

 வாணியம்பாடியில் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மற்றும் வணிகர் சங்கங்களின் பேரவை நிர்வாகிகள் இடையே மோதல். வணிகர் சங்கங்களின் பேரமைப்பு நிர்வாகிகள் மூன்று பேர் காயம் - காவல்துறையினர் முன்னிலையில் மோதல்

  திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மற்றும் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை நிர்வாகிகள் இடையே மோதல் ஏற்பட்டதில் நிர்வாகிகள் மூன்று பேர் காயமடைந்தனர்.

   மே 5ம் தேதி வணிகர் தினத்தை முன்னிட்டு கடைகளை அடைத்து விட்டு ஈரோட்டில் நடக்கவுள்ள விக்ரம ராஜா தலைமையிலான தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் வணிகர் உரிமை முழக்கம் மாநாட்டில் கலந்து கொள்ள அழைப்பிதழ்கள் வழங்கப்பட்டது.

  மாவட்ட செயலாளர் கே.பி.எஸ் மாதேஸ்வரன் தலைமையில் நிர்வாகிகள் வணிகர்களுக்கு வழங்கி வந்த நிலையில், வெள்ளையன் தலைமையிலான வணிகர் சங்கங்களின் பேரவை நிர்வாகிகள் கடைகளை மூடக்கூடாது, செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கத்தில் நடக்கவுள்ள மாநாட்டில் கலந்து கொள்ள வணிகர்களுக்கு அழைப்பிதழ்களை வழங்கினர்.

 இப்படி சி.எல்.சாலையில் உள்ள கடைகளில் வழங்கி வந்ததால் இருசங்க நிர்வாகிகள் இடையே வாக்குவாதம் மற்றும் கைகலப்பு ஏற்பட்டது.

   இதில் விக்ரம ராஜா தலைமையிலான வணிகர் சங்கங்களின் பேராமைப்பு நிர்வாகிகள் அருண்குமார், பத்மநாபன் மற்றும் அப்ரார் ஆகியோர் காயம் அடைந்து வாணியம்பாடி அரசு மருத்துவமனை சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் அறிந்த வணிகர் சங்கங்களின் பேரமைப்பு நிர்வாகிகள், வணிகர்கள் அரசு மருத்துவமனையில் ஒன்று கூடியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

  இதனைத் தொடர்ந்து தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க  கோரியுள்ளனர்

 காவல்துறையினர் முன்னிலையிலேயே மோதல் ஏற்பட்டது ஒருவரை ஒருவர் தாக்கிகொண்டனர் இதில் காயமடைந்ததாக கூறி ஒரு தரப்பினர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் 

தகவல் அறிந்து வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு வருகை தந்த வாணியம்பாடி  நகர போலீசார் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.