எடப்பாடி பழனிச்சாமி சந்திப்புக்கு பின்னர் அ.தி.மு.க.வேட்பாளார் சாவு! கொலை என சாலைமறியல்!

தாம்பரம் முரளிதரன்,
எடப்பாடி பழனிச்சாமி சந்திப்புக்கு பின்னர் அ.தி.மு.க.வேட்பாளர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். காஞ்சிபுரத்தில் நடந்த இந்த சோக சம்பவத்தால், அரசியல் கட்சிகளின் இடையே பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.
வருகிற 19-ந்தேதி தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. இதன் காரணமாக திமுக, அதிமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தங்கள் வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த வகையில் நேற்று செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் போட்டியிடும் நகராட்சி, பேரூராட்சி வேட்பாளர்களை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி சூறாவளி பிரசாரம் மேற்கொண்டார். அத்துடன் செங்கல்பட்டு மாவட்டத்துக்குட்பட்ட தாம்பரம் மாநகராட்சி வேட்பாளர்கள் 70 பேரை ஆதரித்து பேசினார்.
இந்நிலையில் நேற்று காஞ்சியில் 51 வேட்பாளர்களை அறிமுகம் செய்து எடப்பாடி பழனிசாமி பரப்புரை செய்த போது ஜானகிராமனும் அதில் இடம்பெற்றார். அப்படியிருக்க தற்போது அவர் தற்கொலை செய்துகொண்டார்.
நேற்று வரை தனது வார்டு பகுதியில் வாக்கு சேகரித்து வந்த நிலையில் மாலை முன்னாள் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிமுகக் கூட்டத்தில் கலந்து கொண்டு திரும்பிய பின்னர் தற்கொலை முடிவை எடுத்துள்ளார்.
அவர் அதிகாலை 3 மணியளவில் உறங்கி வந்த நிலையில், அவரது தம்பி இயற்கை உபாதைக்காக எழுந்தபோது ஜானகிராமன் கீழே விழுந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
அவரை தூக்க முயற்சித்த போது அவரது கழுத்தில் இருக்குமான துண்டுகள் சுற்றப்பட்டிருந்தது.
அதனை அகற்றி அருகிலிருந்த நபர்களுடன் காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்துபோது அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து விஷ்ணு காஞ்சி காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அதன்பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
உயிர் இழப்பு ஏற்பட காரணம் பிரேத பரிசோதனைக்கு பிறகே தெரியவரும் என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அப்படியிருக்க அவரது மரணத்தில் சந்தேகம் ஏற்பட்டுள்ளதாகவும் கடந்த மூன்று தினங்களாக அவருக்கு வந்த அவரது கைபேசி உரையாடலை முறையாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க கோரி அதிமுக வினர் விஷ்ணு காஞ்சி காவல் நிலையம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். கொலையாக இருக்கலாம் என்றும் கோஷமிட்டனர்.
கொலையா அல்லது தற்கொலையா என்பது குறித்து உயர் போலிஸ் அதிகாரிகள் விசாரித்து வருகிறார்களாம்.
அவர் மாற்றுக் கட்சியினரால் மிரட்டப்பட்டதாக கூறப்படுகிறது.