கில்லாடி கொலையாளியை...சூப்பராக துப்புத் துலக்கி பிடித்த எஸ்.பி.! தனிப்படையினருக்கு பாராட்டு!!

ஜி.கே.சேகரன்,
சினிமா மற்றும் நாடக தொடர்களில் வரும் காட்சிகளை மிஞ்சும் கொலையை ஹிட்ச்காக் போல துப்பு துலக்கிய திருப்பத்தூர் மாவட்ட எஸ்.பி.கே.பாலகிருஷ்ணன்,இ.கா.ப. மற்றும் அவரது தலைமையிலான தனிப்படையினருக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகிறார்கள்.
காதல் மனைவிக்கு மயக்க மாத்திரை கொடுத்து பெட்ரோல் ஊற்றி எரித்த வழக்கில் தேடப்பட்டு வந்த கேடி கணவன் கைது - மற்றொரு பெண்ணுடன் ஏற்பட்ட காதலால் மனைவியை கொன்று நாடகமாடியது அம்பலமானது.
திருப்பத்தூர் அருகே காதல் மனைவியை பெட்ரோல் ஊற்றி கொலை செய்துவிட்டு 3 வயது குழந்தையுடன் தப்பியவன் கள்ளக் காதலியுடன் பிடிபட்டான்.
தஞ்சாவூரில் தனியாக வீடு எடுத்து தங்கியிருந்தவனை அவனது கள்ளக்காதலியுடன் கைது செய்துள்ளனர்.
திருப்பத்தூர் அடுத்த புது பூங்குளம் கிராமத்தை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி (32) இவர் எலவம்பட்டி பகுதியிலுள்ள வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் அருகே தனியார் ஓட்டுநர் பயிற்சி பள்ளி நடத்தி வந்தார்.
இந்த நிலையில் அவரது ஓட்டுனர் பயிற்சி பள்ளி கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு கந்திலி அருகே உள்ள கொட்டாவூர் கிராமத்தைச் சேர்ந்த பெரியசாமி மகள் திவ்யா (24) என்ற பெண் ஓட்டுனர் பயிற்சி கற்றுக்கொள்ள வந்தார்.
சத்தியமூர்த்தியின் ஓட்டுனர் பயிற்சி அளிக்கும்போது ஆசை வார்த்தைகளை கூறி காதல் வலையில் திவ்யாவை வீழ்த்தினார்.
இந்த நிலையில் திவ்யா பிஎட் பட்ட படிப்பு படித்து வந்த போது சத்தியமூர்த்தி திருட்டு கல்யாணம் செய்துக் கொண்டார்.
இவர்களுக்கு பெண் குழந்தை பிறந்தது.
குழந்தையை பராமரிக்க முடியாத காரணத்தினால் திவ்யா தனது சொந்த வீடான கொட்டாவூர் கிராமத்திற்கு வந்து தனது பாட்டி தாத்தாவிடம் குழந்தையை வளர்த்து வந்தார்.
சத்தியமூர்த்தி தனது மாமியார் வீட்டிற்கு வந்து மனைவியை நலம் விசாரித்து இருந்து வந்தார்.
இந்த நிலையில் சத்தியமூர்த்தி ஓட்டுனர் பயிற்சி பள்ளி நடத்தும் போது பல பெண்களிடம் பழகி அவர்களின் வாழ்க்கையை சீரழித்து உள்ளார். அதில் திவ்யாவின் உறவுக்கார பெண்ணான திருப்பத்தூர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்த அர்ச்சனா என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறி இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்துள்ளனர்.
அர்ச்சனா சென்னையிலுள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் செவிலியர் படிப்பு படித்து வருகிறார். அர்ச்சனாவை திருமணம் செய்து கொண்டு வாழ வேண்டும் என்ற நோக்கத்தோடு சத்தியமூர்த்தி இருந்துள்ளார்.
சத்தியமூர்த்தி தனது மனைவி திவ்யாவிடம் தனக்கு இரண்டு சிறுநீரகமும் செயல் இழந்துவிட்டது நாம் மூன்று பேரும் இறந்து விடலாம் என்று தெரிவித்து ஒரு நாடகத்தை அரங்கேற்றியுள்ளார்.
அப்போது திவ்யா நமக்கு பெண் குழந்தை உள்ளது அந்தப் பெண் குழந்தையை யார் காப்பாற்றுவது என்று கேட்டு தற்கொலைக்கு மறுத்துள்ளார்.
அப்போதே திவ்யாவுக்கும் சத்தியமூர்த்தி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது நீ தற்கொலை செய்து கொள்ளாவிட்டால் உன்னை நான் பெட்ரோல் ஊற்றி கொலை செய்துவிடுவேன் என்றும் மிரட்டியதாக கூறப்படுகிறது.
ஆக, திவ்யாவை கொலை செய்ய திட்டமிட்ட சத்தியமூர்த்தி செப்டம்பர் மாதம்25ஆம் தேதி கொட்டாவூரில் இருந்த திவ்யாவின் வீட்டிற்குச் சென்று சனிக்கிழமை சாமி கும்பிட கோயிலுக்கு சென்று வரலாம் என கூறி தனது குழந்தையுடன் மனைவியையும் அழைத்துச் சென்றுள்ளார்.
இருசக்கர வாகனத்தில் வந்த சத்தியமூர்த்தி அவரது ஓட்டுநர் பயிற்சி அலுவலகத்திற்கு வந்து திவ்யாவிற்கு இரண்டு தூக்க மாத்திரைகளை கொடுத்து உள்ளார்.
அதில் மயங்கிய திவ்யாவை உடனடியாக கைத்தாங்கலாக அருகே உள்ள நிலத்திற்கு அழைத்துச் சென்று வைத்திருந்த பெட்ரோலை அவர் மீது ஊற்றி தீ வைத்துக் கொளுத்தி அங்கிருந்து குழந்தையுடன் தப்பி ஓடியுள்ளார்.
சத்தியமூர்த்தியை எஸ்பி தனிப்படையினர் தேடி வந்தனர். அவர் எடுத்துச் சென்ற கார் வாலாஜா சோதனை சாவடியில் பதிவாகி இருந்தது எனவே வேலூர் மாவட்டம் மற்றும் வாலாஜா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சத்தியமூர்த்தியும் குழந்தையும் தேடும் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது சத்தியமூர்த்தி ஒரு வீடியோ பதிவை போலீசுக்கு வெளியிட்டிருந்தார்.
அதில் தனக்கு இரண்டு சிறுநீரகமும் செயல் இழந்துவிட்டது ஆகையால் என் மனைவியை நான் கொலை செய்துவிட்டு நானும் என் குழந்தையும் தற்கொலை செய்து கொள்ளப் போகிறோம் என நாடகமாடி ஒரு வீடியோவை வெளியிட்டார்.
ஆனால் அதை தனிப்படை போலிச்ர் நம்பவில்லை. இதை உணர்ந்த சத்திய மூர்த்தி கடந்த 28 தேதி சென்னை போரூர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரிகள் காரை நிறுத்திவிட்டு குழந்தையுடன் தப்பினார்.
அதன்பின் விசாரணையில் அங்கு செவிலியர் படிப்பு படித்துக்கொண்டிருந்த திருப்பத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் சந்திரன் மகள் அர்ச்சனாவை அழைத்துச் சென்றது தெரிய வந்தது.
இருவரும் குழந்தையுடன் செல்லும் சிசிடிவி பதிவு போலீசாருக்கு சிக்கியுள்ளது. அதன் பின் தான் இந்த கள்ளக்காதல் விவகாரம் அம்பலமானது.
அர்ச்சனாவின் செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்ட நிலையில் அவரது தந்தை சந்திரன் போரூர் காவல் நிலையத்தில் தன் மகளை சத்தியமூர்த்தி கடத்திச் சென்றுள்ளதாக புகார் அளித்தார்.
அதனைத் தொடர்ந்து போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் சென்னை பாரிஸ், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அவரது சிசிடிவி கேமராக்கள் பதிவுகள் இருந்தது. நகை கடைகளில் நகை வாங்கியதும் குழந்தையுடன் உடன் அவர்கள் ஓட்டல்களில் இருந்து வந்ததும் தெரியவந்தது.
அதன் பின் இருவரையும் கைது செய்ய சென்னை மாநகர போலீசார் மற்றும் திருப்பத்தூர் மாவட்ட போலீசார் பல்வேறு கோணங்களில் முயன்றனர்.
ஆனால் போலீஸ் கண்ணில் மண்ணைத் தூவி இருவரும் குழந்தையுடன் தப்பித்து சென்றுள்ளனர்.
தனிப்படை போலிசார் சென்னை, பெங்களூர், ஆந்திரா, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தேடினர்.
இந்த நிலையில் கொலையாளி சத்தியமூர்த்தி வைத்திருந்த பழைய செல்போனில் புதிய சிம்மை வாங்கி செல்போனை ஆன் செய்து உள்ளார்.
அப்போது தஞ்சாவூர் டவர் லொகேஷன் போலீசாருக்கு வந்தது. அதன் அடிப்படையில் நேற்று தஞ்சாவூர் பகுதியில் ஒரு வாடகை வீட்டில் இருந்த சத்தியமூர்த்தியையும், காதலியையும் கந்திலி போலீசார் பிடித்தனர்.
அதன் பின்னர் சத்தியமூர்த்தி திருப்பத்தூருக்கு கொண்டுவரப்பட்டு திருப்பத்தூர் குற்றவியல் நடுவர் முன் நிறுத்தி திருப்பத்தூர் சிறையில் அடைத்தனர்.
அதன் பின்னர் நர்சிங் மாணவி அர்ச்சனா மற்றும் குழந்தையை காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
இந்த வழக்கில் மிகவும் கனகச்சிதமாக துப்புதுலக்கிய மாவட்ட எஸ்.பி.பாலகிருஷ்ணன் இ.கா.ப. மற்றும் அவரது தலைமையிலான தனிப்படையினரை காவல் உயர் அலுவலர்கள் பாராட்டினர்.