கருமுட்டை விற்கலையோ...... கருமுட்டை:- மிரட்டப்பட்ட இளம் பெண்!

கருமுட்டை விற்கலையோ...... கருமுட்டை:- மிரட்டப்பட்ட இளம் பெண்!

ஜி.சாந்தகுமார்,

சென்னை எர்ணாவூர் சுனாமி குடியிருப்பைச் சேர்ந்தவர் விஜய்; பிரபல ரவுடி. இவர் மனைவி சுருதி 22; பி.ஏ. பட்டதாரி. நான்காண்டுகளுக்கு முன் இவர்களுக்கு திருமணம் நடந்துள்ளது.

 இந்நிலையில் சில மாதங்களுக்கு முன் தம்பதியிடையே ஏற்பட்ட பிரச்னையில் விஜய் தன் மனைவி சுருதியை கடுமையாக தாக்கியுள்ளார்.இது குறித்து விசாரித்த எண்ணூர் போலீசார் விஜயை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் சமீபத்தில் அவர் ஜாமினில் விடுதலையாகியுள்ளார்.கணவருடன் வாழ பிடிக்காத சுருதி திருவொற்றியூர் என்.டி.ஓ. குப்பம் குடியிருப்பு 'பி - பிளாக்' 118வது குடியிருப்பில் வசிக்கும் தன் தோழியான ஐஸ்வர்யா 22 என்பவரிடம் தஞ்சம் அடைந்தார்.

 இதில் ஐஸ்வர்யாவின் கணவர் சூரஜ் ஜெனிஸ் கண்ணன் 29 இவரும் பிரபல ரவுடி. துவக்கத்தில் சுருதியை நல்லபடியாக பார்த்த தம்பதி பின் வேலைக்காரியை போல் நடத்தியுள்ளனர். அது மட்டுமின்றி 'கருமுட்டையை விற்றால் 20 ஆயிரம் ரூபாய் வரை கிடைக்கும்' என சுருதிக்கு பண ஆசையை தூண்டினர்.

 அதன் பேரில் இசைவு கிடைத்தபின்னர் பெண் புரோக்கர் மூலம் தாம்பரத்தில் உள்ள மருத்துவமனையில் கருமுட்டையை விற்க முடிவு செய்யப்பட்டது.

 ஆனால், தனியார் மருத்துவமனையில் சுருதி விசாரித்த போது கருமுட்டை பெற 40 ஆயிரம் ரூபாய் வரை பணம் தருவதாக கூறியுள்ளனர். தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த சுருதி  பிரிந்து சென்ற கணவர் விஜயிடம் கூறியுள்ளார்.விஜய் மனைவியை வீட்டிற்கு வந்துவிடும் படி அறிவுறுத்தியுள்ளார். வீடு திரும்பிய சுருதி தன் தோழியான ஐஸ்வர்யா அவரது கணவரிடம் சொல்லி விட்டு வரலாம் என்று சென்ற போது, தோழி ஐஸ்வர்யா மற்றும் அவரது கணவர் சூரஜ் ஜெனிஸ் கண்ணன் ஆகியோர் சுருதியை சரமாரியாக தாக்கி னர்.

  அவர்களிடமிருந்து தப்பிய சுருதி திருவொற்றியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.விசாரித்த போலீசார் இருவரையும் கைது செய்தனர்.

   மேலும் தாம்பரம் தனியார் மருத்துவமனைக்கும் சென்று விசாரிக்கவுள்ளனர். பெண் புரோக்கரும் தீவிரமாக தேடப்பட்டு வருகிறார்.