போலிஸ் வீட்டிலேயே திருட்டு?!

ஜி.கே.சேகரன்,
பேர்ணாம்பட்டு அழிஞ்சிக்குப்பம் கிராமத்தில் ஓய்வு பெற்ற உதவி காவல் ஆய்வாளர் வீட்டின் பூட்டை உடைத்து 15 சவரன் நகை ரூ.90 ஆயிரம் ரொக்கப்பணம் திருடப்பட்டிருக்கிறது.
வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு அடுத்த அழிஞ்சிகுப்பம் பகுதியை சேர்ந்தவர் காந்தி (65), இவர் சென்னை சென்ட்ரலில் சிஎஸ்எப்-ல் எஸ் ஐ யாக பணிபுரிந்து ஓய்வு பெற்றார்.
இவர் தனது மனைவி கலைச்செல்வி உடன் அழிந்துகுப்பம் பகுதியில் உள்ள தனது வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில் தனது மாமியார் சம்பூர்ணம் என்பவர் உடல் நல குறைவால் குடியாத்தம் அரசு மருத்துவமனையில் மூன்று நாட்களாக சிகிச்சை பெற்று வருகிறார்.
தினம் தோறும் காந்தி மற்றும் அவரது மனைவி கலைச்செல்வி இருவரும் குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தனது மாமியாரை பார்த்துவிட்டு வீடு திரும்புவது வழக்கம்.
இதனை தொடர்ந்து நேற்று காலை வழக்கம் போல் காந்தி தனது மனைவி கலைச்செல்வி மகன் யுவராஜ் மருமகள் கல்பனா ஆகியோர் உடன் வீட்டை பூட்டிவிட்டு குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு சென்று அங்கு சிகிச்சை பெற்று வரும் சம்பூரணத்தை பார்த்துவிட்டு மதியம் 2 மணி அளவில் வீடு திரும்பினர்.
அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர் .பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 15 சவரன் நகை மற்றும் 90 ஆயிரம் பணம் திருடு போயிருப்பது தெரிய வந்தது.
இது குறித்து மேல்பட்டி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வேலூரில் இருந்து வரவழைக்கப்பட்ட மோப்பநாய் சிம்பாவை கொண்டு சோதனை நடத்தினர் அது சிறிது தூரம் ஓடி நின்றது, யாரையும் பிடிக்கவில்லை.
பின்னர் விரல் ரேகை நிபுணர் எஸ்.ஐ. தமிழ் ஆகியோர் தடயங்களை சேகரித்தனர். இச்சம்பவம் குறித்து மேல்பட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர். எஸ்ஐ வீட்டில் நகை, பணம் திருடு போயிருப்பது அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து மேல்பட்டி காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர் கொள்ளை போன நகைகள் பணம் ஆகியவற்றின் மதிப்பு சுமார் ரூ,7 லட்சமாகும்
குடியாத்தம் பகுதிகளில் இது போன்று நடந்து வரும் தொடர் திருட்டால் சம்பவங்களால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.