கட்டிங் கொடுக்காததால் 30 டன் அரிசி பறிமுதல்!

கட்டிங் கொடுக்காததால் 30 டன் அரிசி பறிமுதல்!

 கு.அசோக்

  வாணியம்பாடி அருகே வெளி மாநிலத்திற்கு கடத்த முயன்ற 30 டன் ரேஷன் அரிசி லாரியுடன் பறிமுதல் செய்யப்பட்டது. கட்டிங் சரிவர கொடுக்கப்படாததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

  திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே நெக்குந்தி சுங்க சாவடி வழியாக வெளி மாநிலங்களுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக ரகசிய தகவல் குடிமை பொருள் குற்ற புலனாய்வு பிரிவு ஆய்வாளர் சதீஷ்க்கு கிடைத்தது.தகவலின் பேரில் ஆய்வாளர் சதீஷ், துணை ஆய்வாளர் சதீஷ் குமார் ஆகியோர் தலைமையில் குடிமை பொருள் குற்ற புலனாய்வு துறையினர் நெக்குந்தி சுங்கச்சாவடி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனராம்.

  அப்போது சுங்க சாவடி அருகே சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை ஓரம் லாரி ஒன்று வெகு நேரமாக நின்று கொண்டிருந்தது. சந்தேகம் அடைந்த அதிகாரிகள் லாரியை சோதனை செய்தபோது அதில் சுமார் 30 டன் ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதிகாரிகள் லாரியை சோதனை செய்தபோது மறைந்திருந்த லாரி ஓட்டுநர் உட்பட இரண்டு பேர் அங்கிருந்து தப்பி தலைமுறையானார்.

  இதனைத் தொடர்ந்து 30 டன் ரேஷன் அரிசியுடன் லாரியை பறிமுதல் செய்து வாணியம்பாடி நுகர்பொருள் வாணிபக் கிடங்கில் ஒப்படைத்து தப்பி ஓடிய லாரி ஓட்டுநர் உட்பட இரண்டு பேரை அதிகாரிகள் தேடி வருகின்றனர்.

  இது குறித்து ஒரு பட்சி தெரிவிக்கையில் சீரான கட்டிங் கொடுக்காததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதுல கூட பாருங்க அரிசி கடத்தும் முதலாளிகளிடம் பேரம் நடத்தினர். அந்த பேரம் ப்னடியாததால் லாரி மட்டும் பறிமுதல் செய்யப்பட்டதாம்.

அது சரி,