தீயணைப்பு அலுவலர் வீட்டில் சிலிண்டர் வெடிப்பு: 4 பேர் பலி!!

தீயணைப்பு அலுவலர் வீட்டில் சிலிண்டர் வெடிப்பு: 4 பேர் பலி!!

ம.பா.கெஜராஜ்

  தீயணைப்பு அலுவலர் வீட்டில் சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்ட விபத்தில் ஒருவர் பலி, 7 பேர் காயம் அடைந்தனர். இடிபாடுகளுக்குள் மேலும் சிலர் சிக்கியிருக்கக்கூடும் என அஞ்சப்படும் நிலையில் அக்கம் பக்கம் வீடுகள் சேதமடைந்தன.

 சேலம் மாவட்டத்தில் சேலம் பாண்டுரங்கன் தெருவில் உள்ள சிறப்பு தீயணைப்பு நிலைய அதிகாரி பத்மநாபம் என்பவரது வீட்டில் சிலிண்டர் வெடித்து சிதறியதாக போலீசார் தெரிவித்தனர்.

   வெடிவிபத்தால் தூக்கி வீசப்பட்ட கட்டிடத்தின் பாகங்கள் வீழ்ந்ததில், அவ்வழியாகச் சென்ற இருவர் காயமடைந்துள்ளனர். இச்சம்பவத்தில் அருகில் இருந்த 5 வீடுகள் சேதமடைந்தன.

 மேலும் 80 வயதான ராஜலட்சுமி உட்பட இந்த விபத்தில் நான்கு பேர் பலியானார்கள். இடிபாடுகளுக்குள் ஒரு குழந்தை உட்பட மூன்று பேர் இன்னும் சிக்கியுள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

  சிலிண்டர் வெடித்ததில் முதலில் பத்மநாபன், அவரது மனைவி தேவி, மகன் லோகேஷ் உள்ளிட்ட 5 பேர் இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டனர். பின்னர் அவர்கள் தீயணைப்பு மற்றும் காவல்துறையினரால் பத்திரமாக மீட்கப்பட்டனர். இடிபாடுகளில் சிக்கியிருந்த கணேசன், அவரது மனைவி லட்சுமி, தாய் அம்சவேணி உள்ளிட்ட மற்றொரு குடும்பத்தினரும் மீட்புப் பணியாளர்களால் மீட்கப்பட்டனர். எனினும், 10 வயது சிறுமி மற்றும் 18 வயது சிறுவன் உட்பட மூவர் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளனர். அவர்களை மீட்கும் முயற்சி நடந்து வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

  இதில் காயமடைந்த 7 பேரை சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

 தீயணைப்பு அலுவலர் வீட்டிலேயே வெடி விபத்தா என்று மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.