திருமணம் நடத்த மறுப்பு! செயற்கை அரவாணிகளை விரட்டியடித்த கோவில் நிர்வாகம்!

ச.செல்வராஜ்,
பெண்ணாக பிறந்து விருப்பத்தின் பேரில் அறுவை சிகிச்சை செய்து ஆணாக மாறியவர் நீலம் கிருஷ்ணனா(வயது 31).திருவனந்தபுரத்தை சேர்ந்தவர் இவர், அதே பகுதியை சேர்ந்த ஆத்மிகா(25). இவர் ஆணாக பிறந்து விருப்பத்தின்பேரில் அறுவை சிகிச்சை மூலம் பெண்ணாக மாறியவர்.
இவர்கள் 2 பேரும், பாலக்காடு மாவட்டம் கொல்லங்கோடு நகரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியர்களாக வேலை பார்த்து வருகின்றனர்.
அப்போது அவர்களுக்குள் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. தொடர்ந்து அவர்கள் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர்.
அதன்படி நேற்று பாலக்காடு அருகே காலாங்குறிச்சி பகவதி அம்மன் கோவிலில் திருமணம் நடைபெற இருந்தது. இதற்கு கோவில் நிர்வாகத்திடம் முன் அனுமதியும் பெற்று இருந்தனர். ஆனால் திடீரென நேற்று முன்தினம் அனுமதி இல்லை என்று கோவில் நிர்வாகம் கூறி விரட்டிவிட்டது.
இதனால் அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். எனினும் திருமணம் செய்து கொள்ளும் முடிவில் உறுதியாக இருந்த அவர்கள், தங்களது நண்பர்கள் உதவியுடன் அங்குள்ள ஒரு மண்டபத்தை வாடகைக்கு எடுத்தனர். தொடர்ந்து அந்த மண்டபத்தில் அவர்களுக்கு நண்பர்கள் சூழ திருமணம் நடைபெற்றது. கடைசி நேரத்தில் கோவிலில் திருமணம் நடத்த அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதற்கு கேள்விக்குரல்கள் எழுந்துள்ளன.