ஜெயலலிதாவின் ஓட்டுநரை சேலம் விருந்தில் போட்டுத்தள்ள ஸ்கெட்ச்! பரபரப்பு பேட்டி!

கதிர்,
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஓட்டுநரை சேலம் விருந்தில் போட்டுத்தள்ள ஸ்கெட்ச் போடப்பட்டதாக தற்போது தகவல்கள் வெளியாகியிருக்கிறது.
ஜெயலலிதாவின் கோடநாடு எஸ்டேட் ஓட்டுநராக இருந்தவர் கனகராஜ். இவர் சேலத்தில் நடந்த விருந்தில் கலந்துக் கொண்டிருந்த போது அவரை கொலை செய்ய ஸ்கெட்ச் போட்டதாக ஊடகங்களில் செய்தி வெளியாகியிருக்கிறது.
மேற்படி கனகராஜ், கோடநாடு கொள்ளை 24.04.2017 ஆம் தேதி இரவு நடந்தது. இந்த சம்பவம் நடந்து 4 வது நாளில், அதாவது 28-ம் தேதி கனகராஜ் சேலத்தில் கார் விபத்தில் ஒன்றில் கொல்லப்பட்டார்.
கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் முதல் குற்றவாளியாக குற்றஞ்சாட்டப்பட்டவர் தான் கனகராஜ்.
கனகராஜின் மரணம் விபத்து என்று பதிவு செய்யப்பட்ட நிலையில், இது கொலையாக இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
அதற்கேற்றவாறு, கோடநாடு வழக்கில் 8-வது குற்றவாளியாக விசாரிக்கப்பட்டு வரும் சந்தோஷ் சாமி என்பவர் பேட்டி ஒன்றில் தெரிவிக்கையில், கனகராஜ் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டதாக கூறியுள்ளார்.
தனியார் ஊடகமான நியூஸ்18 தமிழ் சானலுக்கு சந்தோஷ் சாமி அளித்த பேட்டியில், கோடநாடு கொள்ளைக்கு பின் எங்களை தமிழ்நாடு போலீசார் கேரளாவில் கைது செய்தனர். நாங்கள் போலீஸ் காரில் சென்ற போது எங்களுடன் செபி என்ற நபர் வந்தார். அவர் போனில் யாருடனோ பேசிக்கொண்டு இருந்தார். போனில் கனகராஜை கொல்லும்படி அவர் யாரிடமோ கட்டளையிட்டார்.
சேலத்தில் தான் கனகராஜ் இருக்கிறார். கனகராஜ் விருந்து ஒன்றில் இருக்கிறார், அவரை இன்றே தீர்த்து கட்டிவிடுங்கள் என்று கூறினார். ஆனால் அவர் யாரிடம் பேசினார் என்று தெரியவில்லை என்று சந்தோஷ்சாமி ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் கூறி உள்ளார்.
சந்தோஷ் சாமியின் இந்த பேட்டியைத் தொடர்ந்து செபி யாருக்கு போன் செய்தார் என்று கேள்வி எழுந்துள்ள நிலையில், போலீஸ் வாகனத்தில் அமர்ந்து கொண்டு செபி கொலை செய்வது பற்றி எப்படி பேசினார், போலீஸ் இதற்கு எப்படி அனுமதித்தனர் என்று சர்ச்சை எழுந்துள்ளது.
மேலும், கோடநாடு குற்றவாளிகளை தமிழ்நாடு போலீசார் கேரளாவில் கைது செய்த போது கூடவே செபி மற்றும் பல குண்டர்கள் வந்ததாக சந்தோஷ் சாமி தெரிவித்துள்ளார்.
அதேபோல் போலீஸ் வாகனத்திற்கு பின் போலீஸ் அல்லாத மூன்று வாகனங்களில் குண்டர்கள் இருந்ததாக சந்தோஷ் சாமி பேட்டியில்ஸ் குறிப்பிட்டுள்ளார்.
இதில் செபி அதிமுக பிரமுகர் சஜீவனின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதே போல் இந்த வழக்கின் முக்கியகுற்றவாளியான சயான் என்பவரை குறிவைத்து நடத்தப்பட்ட வாகன மோதலில், சயான் தப்பிவிட அவரது மனைவிமற்றும் மகள் கொல்லப்பட்டனர்.
அப்போது, சயான் கண்ணீரோடு கொடுத்த பேட்டியில், இந்த விபத்து திட்டமிட்டு நடத்தப்பட்டது. இது திட்டமிட்ட கொலை. என் மனைவி மகன் மரணம் குறித்து விசாரிக்க வேண்டும் என்று தெரிவித்து இருந்தார். இந்த நிலையில்தான் தற்போது கனகராஜ் மரணம் குறித்து சந்தோஷ் சாமி கொடுத்து இருக்கும் பேட்டி கோடநாடு வழக்கில் திருப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது.