புல்லாங்குழல் இசையுடன் சரக்கு போடும் போலிஸ் டி.சி! ஜட்டியுடன் ஜாலியாக உள்ளார்!!

பா.ரமேஷ் ஆனந்தராஜ்,
ஜட்டியோடு ஜாலியாக சரக்கடித்த போலிஸ் டி.சி. ஒருவர், குஷியாக இருக்க காவலர் ஒருவரை புல்லாங்குழல் இசைக்க வைத்துள்ளார்.
இதுபற்றின விவரம் வருமாறு,
மதுரை மாநகர், ஆயுதப் படையில் காவல் உதவி ஆணையராக இருப்பவர் பெயர் சோமசுந்தரம், ரொம்ப நல்ல மனுஷன் என்று பெயர் பெற்ற அவர் டுயூட்டி நேரத்தில் மது அருந்தும் பழக்கம் கொண்டவர்.
இந்நிலையில் இவர் குடித்துவிட்டு கும்மாளம் போட்ட காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது.
அதில் டி.சி.சோமசுந்தரம் ஜட்டி மட்டும் அணிந்தவாறு ஆயில் மசாஜ் செய்தபடி சரக்கடித்துக் கொண்டிருக்கிறார்.
மேலும், ஆயுதப்படை இசைக்குழுவில் உள்ள காவலர் ஒருவரை அழைத்துவந்து "பொட்டு வைத்த மல்லிகை மொட்டு" உள்ளிட்ட பல பாடல்களை புல்லாங்குழலில் வாசிக்கவைத்து அதை கேட்டபடியே சரக்கடித்துக் கொண்டிருந்தார்.
இந்த காட்சிகள் வெளியான பின்னர் நல்ல மனிதர் சோமசுந்தரத்தை சக காவல் துறையினர் வறுத்தெடுத்து வருகிறார்கள்.
தற்போது இவர் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார்
இதுபோன்று இவர் அடிக்கடி வைரலாகி பரபரப்பை ஏற்படுத்துபவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ரபரப்பை ஏற்படுத்துபவர் என்பது குறிப்பிடத்தக்கது.