பெங்களூரு தமிழ் பள்ளிக் கூடத்தில் கரண்ட் கட்! ஏழு ஆண்டாகியும் மவுனம்!

D.தியேடர்,
பெங்களூரு தமிழ் பள்ளிக் கூடத்தில் கரண்ட் கட் செய்யப்பட்டு ஏழு ஆண்டுகளாகியும் அங்குள்ள தமிழகர்களால் குரலெழுப்ப இயலவில்லை.
கர்நாடக மாநிலம்,பெங்களூரு, அசோக் நகர், கம்மிஷரியேட் தெருவில் அரசு தமிழ் உயர் ஆரம்பப்பள்ளி உள்ளது.
1930-ம் ஆண்டு ஆங்கிலேயர்களால் துவக்கப்பட்ட
இந்த பள்ளி கர்நாடக மாநில சட்டப்பேரவையான விதானசௌதாவில் இருந்து 4 கிமீ தொலைவில் இயங்குகிறது.
ஆனால் அங்கு கடந்த 7 ஆண்டுகளாக மின்சாரம் இல்லாமல் இந்த பள்ளி செயல்பட்டு வருகிறது.
இந்த பள்ளியில், 1 முதல் 5-ஆம் வகுப்புவரை 10 மாணவர்கள் படித்துவருகிறார்கள். அதற்காக ஒரு ஆசிரியர் பணியாற்றி வருகிறார்.
பள்ளியில் மின்சாரம் இல்லாததால் மாணவர்களால் பள்ளியின் உள்ளே அமர முடியாத நிலை உள்ளது. மின் விளக்கு, மின்விசிறி போன்ற எந்தவசதியும் இல்லை. மேலும், கழிவறைக்கு தண்ணீர் வசதியும் இல்லை. குடிநீரும் இல்லை.
பள்ளி கட்டடமும் பழமையானது என்பதால், இந்த பள்ளியில் குழந்தைகளை சேர்க்க பெற்றோர்கள் யாரும் முன்வரவில்லை.
இதனால் பள்ளியில் படித்துவந்த மாணவர்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்துவிட்டதாக அப்பகுதிவாழ் வாசிகள் சொல்கிறார்கள்.
இந்த பள்ளிக்கு மின்வசதி உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்பு வசதிகளை செய்துத்தர பள்ளிக்கல்வித்துறையோ, மக்கள் பிரதிநிதிகளோ அக்கறை செலுத்தவில்லை.
ஆங்கிலேயர்கள் காலத்தில் தொடங்கப்பட்ட தமிழ்ப்பள்ளி என்பதால், இப்பள்ளியின் வளர்ச்சியில் யாரும் அக்கறை செலுத்துவதில்லை என்று அப்பகுதியை சேர்ந்த தமிழ் பெற்றோர் ஒருவர் சொல்கிறார்.
இப்பகுதியில் பொருளாதாரத்தில் நலிவடைந்தநிலையில் உள்ள தமிழர்கள் பலர் தங்கள் குழந்தைகளுக்கு தமிழ்க்கல்வியை கொடுக்க நினைத்தாலும், அதற்கான வாய்ப்பு அரசுப்பள்ளிகளில் இல்லை.
அதே நேரத்தில் "இந்த தமிழ்ப்பள்ளியை கன்னடப் பள்ளியாக மாற்றும் முயற்சி ஒருபுறம் நடந்து வருகிறது. மாணவர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதை காரணம் காட்டி, பள்ளியை மூடிவிட்டு அந்த இடத்தில் வணிக நிறுவனங்களை கொண்டுவரவும் அதிகார வர்கத்தினர் முயன்று வருகிறார்கள்.
"இந்த பள்ளியின் கட்டடத்தை இடித்துவிடும் திட்டம் இருப்பதால் தான், மின்சார வசதி அளிக்கப்படவில்லை" என்று அரசு அதிகாரி ஒருவர் சொல்கிறார்.
இது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பி.சி.நாகேஷ் கூறுகையில்,"சம்பந்தப்பட்ட வட்டார கல்வி அதிகாரியை அனுப்பி பள்ளியை பார்வையிடுமாறு கேட்டுக்கொள்வேன். அதன்பிறகு, பள்ளிக்கு மின்வசதி செய்துதரப்படும்." என்றார் அவர்.
அப்படின்னா சந்தோஷம் தான். ஏன்னா பெங்களூருவின் பழைமைகளில் இதுவும் ஒன்றல்லவா!