குடியரசு தினம் எப்படி வந்தது தெரியுமா!

குடியரசு தினம் எப்படி வந்தது தெரியுமா!

     ம.பா.கெஜராஜ்,

    "பாரதம் தாய் திருநாடு: என்று பெருமைப்பட்டுக் கொள்ளும் நாம் குடியரசு தினம் எப்படி வந்தது, அதை ஏன் கொண்டாடுகிறோம் என்பதை கட்டாய அறிந்து வைத்துக் கொள்ள வேண்டுமல்லவா?

     ஆங்கிலேயர்களிடம் அடிமைப்பட்டுக்கிடந்த இந்தியர்களின் தொடர் போராட்டங்களின் விளைவாக, இந்தியாவை விட்டு புறப்பட அவர்கள் முடிவு செய்தனர். 1947-ம் ஆண்டு ஆகஸ்டு 15-ந் தேதி இந்தியா சுதந்திரம் அடைந்தது.

 ஆனால் அது சுதந்திரம் முழுமையானது அல்ல.  பிரிட்டிஷ் அரசு இந்தியாவை தொடர்ந்து தங்கள் கண்காணிப்பில் வைத்துக் கொள்ள  திட்டமிட்டுதன் எதிரொலியாக டொமினியன் அந்தஸ்தை வழங்கியது. 

   ஆகவே ஆங்கிலேயர்¢ சார்பில் நியமிக்கப்பட்ட கவர்னர் ஜெனரல் தான் நாட்டின் தலைவராக இருந்தார்.

    நாடு சுதந்திரம் பெற்ற பின் இந்தியாவிற்கான அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்க டாக்டர்.அம்பேத்கர் தலைமையில் 1947-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 28-ந் தேதி ஒரு குழு நியமிக்கப்பட்டது.

   இந்த குழு அதே ஆண்டு நவம்பர் மாதம் வரைவு அறிக்கையை சமர்ப்பித்தது. இந்த வரைவு அறிக்கை தொடர்பாக நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் உள்ள மக்கள் மற்றும் நிபுணர்களின் கருத்துகளை அறியும் வகையில் விவாதங்கள் நடத்தப்பட்டன.

    அதன் பின்னர் 1950-ம் ஆண்டு ஜனவரி 24-ந் தேதி பாராளுமன்றத்தில் அந்த சட்டவரைவு ஏற்றுக்கொள்ளப்பட்டது. 308 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒப்புதலுடன் இந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் எழுதப்பட்ட அரசியலமைப்பு கையெழுத்திடப்பட்டது.

    நாடு விடுதலை பெறுவதற்கு 17 ஆண்டுகளுக்கு முன்பே மகாத்மா காந்தி ஏற்படுத்திய விடுதலை நாளான ஜனவரி 26-ந் தேதி, மக்களாட்சி மலர்ந்த நாளாக கொண்டாட, சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு தலைமையிலான மந்திரி சபைமுடிவு செய்தது.

  அதன் பின் இந்திய அரசியலமைப்பு 1949-ம் ஆண்டு நவம்பர் மாதம் 26-ந் தேதி இந்திய அரசியல் நிர்ணய சபையால் ஏற்றுக் கொள்ளப்பட்டு 1950-ம் ஆண்டு ஜனவரி 26-ந் தேதி நடைமுறைக்கு வந்தது. இதுதான் நாம் கொண்டாடும் குடியரசு தினம்.