தமிழக பாலாற்றுக்கு நீர்வராமல் தடுத்த ஆந்திர தடுப்பணை!

ஜி.கே.சேகரன்,
தமிழக ஆந்திரா எல்லையில் உள்ள தமிழக ஆந்திரா எல்லையில் கடந்த 3 நாட்களாக பெய்த கனமழையால் புல்லூர் தடுப்பணை முழுவதும் நிரம்பியது நிரம்பியது.
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அருகே தமிழக ஆந்திரா எல்லை பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக எல்லையில் புல்லூர் கிராமத்தில் உள்ள தடுப்பணை முழுவதும் நிரம்பியுள்ளது.
இந்த அணை பெரும்பள்ளம் என்ற இடத்தில் பாலாற்றின் குறுக்கே ஆந்திரா அரசு கட்டியுள்ள 12 அடி உயரமானது என்பது நினைவுகூறத்தக்கதாகும். இப்படி ஆந்திர அரசு 12 அடி உயரத்துக்கு தடுப்பணை கட்டியதால் பாலாற்றில் செல்லக்கூடிய வெள்ள நீர் அந்த தடுப்பணையில் தேங்கி நிற்கிறது.
அந்த தடுப்பணை கட்டாமல் இருந்திருந்தால் தமிழக பாலாற்றில் அதிக அளவு நீர்வரத்து இருந்திருக்கும்
தமிழக அரசு பாலாற்றின் குறுக்கே ஆங்காங்கே தடுப்பணைகள் கட்டியிருந்தால் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும் வகையில் நீர் சேமித்து வைத்திருக்க வசதியாக இருந்திருக்கும் என்று விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
கடைசிவரைக்கும் நம்ம விவசாயிகள் வேதனை மட்டுமே பட முடியும் போலிருக்கு.