அதிக மழை வேண்டி சிறுவனுடன் சிறுவனுக்கு திருமணம்!

பா.ரமேஷ் ஆனந்தராஜ்,
சிறுவனுடன் சிறுவவனுக்கு திருமணம் செய்யும் சம்பவம் கர்நாடக மாநிலத்தில் அரங்கேறி உள்ளது.
கர்நாடக மாநிலத்தில் உள்ள மாண்டியா மாவட்டத்தில் மற்ற ஏரியாவை போல அவ்வளவாக மழை பெய்யவில்லையாம்.
அப்படியிருக்க அம்மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணராஜபேட்டை தாலுகாவுக்கு உட்பட்ட கங்கனஹள்ளி கிராமத்தில் ஊர் கூட்டம் போட்டனர்.
அந்தக் கூட்டத்தில் பேசிய பெருசுகள், இது போன்ற மழை வராத பிரச்சனைக்கு மூதாதையர் காலத்தில் எப்படி சிறுவர்களுக்கு கல்யாணம் செய்து வைத்தோமோ அதே போல் இக்காலத்திலும் செய்யலாம் என்று முடிவெடுத்தனர். அதற்கு ஊர் மக்களும் இசைவு சொன்ன நிலையில் அதற்காக 2 சிறுவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
அவ்வாறு தேர்வு செய்யப்பட்ட சிறுவர்களுக்கு பாரம்பரிய ஆடை அணிவித்து அவர்கள் இருவரையும் மணமக்களாக மாற்றி திருமண நிகழ்ச்சி ஒன்றை நடத்தினர்.
அதனுடன், மழை வரவேண்டும் என கிராமவாசிகள் மழை கடவுளிடம் பிரார்த்தனை செய்தனர்.
இதில் பங்கேற்றவர்களுக்கு உணவு பரிமாறப்பட்ட்டது. இது மக்களின் நம்பிக்கை அடிப்படையிளான விஷயம் என்பதால் மழை வந்தால் சரி.