ரவுடியை துப்பாக்கியால் சுட்டுப் பிடித்த போலீசார்!

ரவுடியை துப்பாக்கியால் சுட்டுப் பிடித்த போலீசார்!

 கண்ணன்,

  பலே ரவுடியை போலிசார் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்த விவகாரம் பரபரப்பை உண்டாக்கியிருக்கிறது.

  மதுரை, அண்ணாநகர் பகுதியில் உள்ள செண்பகத் தோட்டத்தில் மீனவர் சங்க கட்டிடம் உள்ளது. அங்கு பெண் ஒருவருடன்  நள்ளிரவு ரவுடி குருவி விஜய் என்பவர், பாலியல் வன்முறையில் ஈடுபட முயன்றார்.

  இதையடுத்து அந்தப் பெண் கூச்சல் போட்டார். இதைக் கேட்டு, அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் அளித்தனர் .

  அங்கு விரைந்து வந்த போலீசார், ரவுடி குருவி விஜய்யை பிடிக்க முயன்றனர். அப்போது ரவுடியின் கூட்டாளிகள், போலீசாரை தாக்க முயன்றனர். இதனையடுத்து ரவுடி விஜய்யின் காலில் போலீசார் துப்பாக்கியால் சுட்டனர்.

  இதனால் அவர் அங்கேயே கீழே விழுந்தார். அவரை பிடித்த போலீசார், அவர் கூட்டாளிகளையும் சுற்றிவளைத்து பிடித்தனர்.

   காலில் காயமடைந்த ரவுடியை, சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் போலீசார் சேர்த்தனர்.

 ஆனால் பாலியல் சம்பவம் நடக்கவில்லை என்றும், ரவுடியை பிடிக்க போலிசார் இப்படி ஒரு பொய் காரணத்தை சொல்வதாகவும் கூறப்படுகிறது.