சிறுமிகளை அடமானம் பிடித்து தாக்கிய கற்பகம் மில் ஊழியர்கள்! உரிமையாளர் மீது வழக்கு பாயாதா?

 ம.பா.கெஜராஜ்,

 கற்பகம் ஸ்பின்னிங் மில்லில் கூலி வேலை செய்யவதற்காக வந்திருந்த வட மாநில சிறுமியை அங்கிருந்த ஊழியர்கள் சகட்டு மேனிக்கு தாக்கியதால் அந்த பெண் கதறி அழுது துடித்தார்.

 அது தொடர்பான வீடியோ வைரல் ஆன நிலையில், மேற்படி கற்பகம் ஸ்பின்னிங் மில்லின் ஊழியர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.

இது பற்றின விவரம் வருமாறு,

  கோவை மாவட்டத்தில் ஏராளமான வடமாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில், கற்பகம் மில்ஸ்ஸில்  ஜார்க்கண்ட் சேர்ந்த சிறுமி வேலைக்கு சேர்ந்துள்ளார்.

 அப்போது அவளுக்கு உடல் நலன் சரியில்லாததால் வேலைக்கு செல்லவில்லையாம்.

 எனவே அந்த சிறுமி தங்கியிருந்த பெண் விடுதியின் வார்டன் லதா மற்றும் மேலாளார் முத்தையா ஆகியோர் கட்டையால் தாக்கியுள்ளனர்.

  இதை வீடியோ எடுத்த சக சிறுமி ஒருவர் அதை வாட்ஸாப்பில் பதிவிட அவை வைரலானது.

  அதனையடுத்து விடுதியின் வார்டன் லதா மற்றும் மேலாளார் முத்தையா ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. தற்போது அவர்கள் கைதாகியுள்ளதாக தகவல்;.

 இருந்த போதும் கற்பகம் மில்ஸின் உரிமையாளரை கைது செய்யவில்லை.

  இது குறித்து கோவைவாசி ஒருவர் தெரிவிக்கையில், குறைந்த கூலி, 12 மணி நேரம் பணி என்கிற அக்ரிமென்ட்படி பணிபுரிய வடமாநில சிறுவர், சிறுமிகளை கோவை மில் அதிபர்கள் சிலர் அடமானம் பிடிக்கிறார்கள்.

 இதற்காகவே சில பல புரோக்கர்கள் உள்ளனர்.

 மேற்படி ஒடிசா போன்ற வறுமை பகுதியில் உள்ள பெற்றோர்களை பார்த்து பேசி அட்வான்ஸ் கொடுத்து அடமானம் பிடித்து வரப்பட்டு இங்கு இப்படி அடி உதை கொடுத்து கட்டாயப்படுத்தி வேலை வாங்குகிறார்கள்.

  மனதளவில் மட்டுமின்றி பாலியல் ரீதியாகவும் துன்புறுத்தல்கள் நடக்குது.

  இதெல்லாம் அரசு அலுவர்களுக்கு தெரியாமல் இல்லை. என்ன செய்வது பணம் பாதாளம் வரை பாய்கிறதே என்கிறார் வேதனையோடு.

  இது போன்ற பிரச்சனைகளுக்கு ஒரே  தீர்வு மனித உரிமைகள் ஆணையம் தான்.