கெட்டு போன மாடு மற்றும் கோழிக் கறி, அழுகிப்போன முட்டை:- மட்டமான ப்ரைட் ரைஸ்!மம்மிடாடி ஓட்டல் மீது புகார்!
ஜி.சாந்தகுமார்,
சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள மம்மி பாஸ்ட் புட் கொஞ்சம் பிரபலம் தான். ஆகவே அந்த பகுதியில் உள்ள உழைப்பாளிகள் மற்றும் நடுத்தர வர்கத்தினர் அசைவம் சாப்பிட இங்கு அதிக அளவில் வருகிறார்கள்.
இந்நிலையில் மேற்படி ஓட்டலை குறித்து சில அரசல் புரசலான குற்றச்சாட்டுகளும் உள்ளன.
அதாவது மாட்டிறைச்சி பிரைடு ரைஸ் வாங்கினால் அதில்; அஜினா மோட்டோவை அதிகம் கலக்கிறார்கள், அதனால் சாப்பிடும் போது நல்ல ருசியாக உள்ளது, அதே சாப்பிட்டு கொஞ்சம் நேரத்துக்கெல்லாம் வயிற்று போக்கு ஏற்படுகிறது.
இது குறித்து கடை உரிமையாளரிடம் புகார் சொன்னால், இதுமாதிரி யாருமே சொல்லவில்லை நீங்கமட்டும் சொல்றீங்க என்று வாயை அடைத்து அனுப்பிவிடுகிறார்கள்.
விவரம் இப்படியிருக்க, நேற்று அந்த பகுதியைச் சேர்ந்த இருவர் மம்மி டாடி ஓட்டலுக்கு சென்று மாட்டிறைச்சி பிரைடு ரைஸ் ஆர்டர் செய்து சாப்பிட துவங்கினர்.
அந்த ரைஸில் உள்ள இறைச்சியை எடுத்து வாயில் மென்ற போது அது மசியவேயில்லை, கல்மாதிரி இருந்துள்ளது.
உடனே ஒரு துண்டு இறைச்சியை தட்டிலிருந்து எடுத்து டேபிளில் போட்டு ஸ்பூனால் வெட்டி பார்த்தனர், அப்போதும் அது மசியவில்லை.
இதனால் வெறுப்பான அவர்கள் பிரைடு ரைஸை சாப்பிடாமலேயே அங்கிருந்து வெளியேறினர்.
அதோடுமட்டுமின்றி மம்மி டாடி ஓட்டல் குறித்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு வாட்ஸாப் மூலம் புகாரும் அனுப்பிவைத்தனர்.
இது குறித்து சிலர் தெரிவிக்கையில், கோழி உயிருடன் இருக்கும் போது வாங்கி அதை சமையலுக்காக அறுத்து சுத்தம் செய்து பீஸ் போட்டு தயார் படுத்துவதுதான் சரியான முறையாகும்.
ஆனால் மம்மி டாடி ஓட்டலில் உயிருடன் உள்ள மாடு,கோழியை வாங்குவதில்லை. மாறாக மாடு,கோழியை வேன்களில் கொண்டு வரும் போது ஒன்றோடு ஒன்று மோதி தினமும் பல மாடு, கோழிகள் செத்துவிடும்.
அப்படிப்பட்ட , கோழிகளை பாதி விலைக்கு வாங்கி வந்து மம்மி டாடி ஓட்டல்காரர்கள் சமைக்கிறார்கள். இதில் பிரச்சனை என்னவென்றால் செத்து ஒரு நாள் கழித்துதான் அந்த இவை இவர்களுக்கு கிடைக்கும். அப்படின்னா அது முழுவதுமாக கெட்டு போயிருக்கும் என்கிறார்கள்.
அது மட்டுமின்றி அடிபட்டு நோய்வாய்ப்பட்டு செத்துப்போன மாட்டிறைச்சி, அழுகிய முட்டை, கெட்டுப்போன கோஸ், ரேஷன் அரி, ரேஷன்கடை பாமாயில் போன்றவற்றை மம்மிடாடி ஓட்டலில் பயன்படுத்துவதால் தான் பிரைட் ரைஸிம் சரி மற்ற அயிட்டங்களும் சரி இப்படி தரமற்று உள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி நகரில் இதே மாதிரியான குறைபாடுகள் கண்டுபிடிக்கப்பட்ட
ஓட்டல் மீது மக்கள் குற்றம் சாட்டினர்.
ஆனால் உணவு பாதுகாப்பு அலுவலர்களோ ஆடி அசைந்து நடவடிக்கை எடுப்பதற்குள், அந்த ஓட்டலில் சிக்கன் சாப்பிட்ட சிறுமி செத்துவிட்டாள். ஆகவே அது மாதிரியான சோக சம்பவம் ஏதும் நடக்கும் முன் சென்னை உணவு பாதுகாப்பு அலுவலர்கள் மம்மி டாடி ஓட்டல் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது வண்ணார பேட்டை மக்கள் அவா?