கேரளாவுக்கு ஆதரவாக பேசிய கம்பம் எம்.எல்.ஏ. வுக்கு கண்டனம்!

கேரளாவுக்கு ஆதரவாக பேசிய கம்பம் எம்.எல்.ஏ. வுக்கு கண்டனம்!

  செல்வராஜ்,

  கம்பம் தொகுதியின் எம்.எல்.ஏ. முல்லை பெரியாறு அணை குறித்து சர்ச்சையான கருத்து தெரிவித்து கண்டனத்திற்கு ஆளாகியுள்ளார்.

   கம்பம் எம்.எல்.ஏ., ராமகிருஷ்ணன் முல்லை பெரியாறு அணை குறித்து தெரிவித்த கருத்துக்கு ஐந்து மாவட்ட விவசாயிகள் சங்கத்தினர் கடும் ஆட்சேபம் எழுப்பி உள்ளனர்.வரை பதவி விலகுமாறு வலியுறுத்தி வருகின்றனர்.

  கம்பம் தொகுதி தி.மு.க., எம்.எல்.ஏ., ராமகிருஷ்ணன், முல்லை பெரியாறு அணை குறித்து கேரளாவிற்கு ஆதரவாக சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்து இருந்தார். இந்த கருத்து தமிழக ஐந்து மாவட்ட விவசாயிகள் சங்கத்தினர் இடையே கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

 இந்நிலையில் எம்.எல்.ஏ., தனது கருத்தை திரும்ப பெற்று விவசாயிகளிடம் மன்னிப்பு கோர வேண்டும். தமிழர்களிடம் ஒட்டு வாங்கி வெற்றி பெற்ற அவர், தனது பதவியை ராஜினாமா செய்யவேண்டும். தி.மு.க., தலைமை அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐந்து மாவட்ட விவசாயிகள் சங்கத்தினர் ஆவேசம் பொங்க கோருகின்றனர்.