தமிழக அரசின் அழுத்தம் காரணமாக சுங்கசாவடி கட்டணம் 40 சதவிகிதம் குறைப்பு! அமைச்சர் எ.வ.வேலு பேட்டி!

தமிழக அரசின் அழுத்தம் காரணமாக சுங்கசாவடி கட்டணம் 40 சதவிகிதம் குறைப்பு! அமைச்சர் எ.வ.வேலு பேட்டி!

ஜி.கே.சேகரன்,

  எங்களின் அழுத்தத்தின் காரணமாக தற்போது 40 சதவிகித சுங்கசாவடிகள் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது- தமிழக முதல்வர் 2200 கோடி ஒதுக்கியுள்ளார் இது முழுமையாக கிராமப்புற சாலைகளை மேம்படுத்த பயன்படுத்தப்படவுள்ளது - இடிக்கப்பட்ட பள்ளிகளை முழுமையாக கட்ட 3 ஆயிரம் கோடி தேவை முதல்வரும் நிதி ஒதுக்கியுள்ளார் படிப்படியாக இடிக்கப்பட்ட பள்ளிகள் கட்டிதரப்படும் பொதுப்பணித்துறை அமைச்சர் எ,.வ.வேலு வேலூரில் பேட்டி

  வேலூர்மாவட்டம்,வேலூர் அப்துல்லாபுரத்தில் பழமைவாய்ந்த தொழிற்பயிற்சி மையத்தில் புதியதாக தொழிற்பயிற்சி கூடம் கட்டுமான பணிகளை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ,வேலு, சிறுபான்மைதுறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் சட்டமன்ற உறுப்பினர்கள் கார்த்திகேயன், நந்தகுமார் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் உள்ளிட்டோர் ஆய்வு மேற்கொண்டனர்.

 பின்னர் அமைச்சர் எ.வ.வேலு கூறுகையில் புதிய தொழில்நுட்பத்தின் அடிப்படையில் பயிற்சிகள் வழங்க புதிய முறையில் 69 இடங்களில் ஐ.டி,ஐக்கு 264 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து பணிகள் நடந்து வருகிறது.

 இதில் வேலூர், ராணிப்பேட்டை, ஒரகடம்,அரக்கோணம் ஆகிய இடங்களில் பணிகள் ஜனவரி மாதத்திற்குள்ளாக நிறைவடையும்.

  தமிழக முதல்வர் 2200 கோடி ஒதுக்கீடு செய்துள்ளார் இந்த தொகை மூலம் மாநிலம் முழுவதும் கிராம சாலைகள் முழுமையாக மேம்படுத்தபடும் ஏற்கனவே ரூ.5200 கோடி செலவில் நகர்புற சாலைகள் மேம்படுத்தும் பணிகள் நடந்து வருகிறது.

  தமிழ்நாட்டில் பழைய பள்ளி கட்டிடங்கள் எவ்வித அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க இடிக்கப்பட்டது, தற்போது புதிய பள்ளி கட்டிடங்களை கட்ட ரூ.3 ஆயிரம் கோடி தேவைப்படுகிறது.

 இடிக்கப்பட்ட பள்ளி கட்டிடங்கள் படிப்படியாக எல்லா இடங்களிலும் கட்டி தரப்படும்.

 இந்தியாவிலேயே சாலைவிபத்து குறைந்துள்ள மாநிலம் தமிழ்நாடு தான் கரூர் மேம்பால்ம் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியது பில் போடப்பட்டுள்ளது என கூறியுள்ளார்.

  அதனை நானும் ஆய்வு செய்தேன் பணிகள் நிறைவு பெற்றது ஒப்பந்ததாரரின் கையொப்பம் எம்புக்கில் இல்லாமல் பணம் வழங்கிய அதிகாரி மீது நடவடிக்கையை எடுத்துள்ளோம்.

  அதில் முறைகேடு எதுவும் நடக்கவில்லை.

 பாலாற்றில் குறுக்கே விரிஞ்சிபுரம் மாதனூர் உள்ளிட்ட மேம்பாலங்களுக்கு ஒன்றிய அரசின் அனுமதிக்காக அனுப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.

  விரைவில் அவைகள் கட்டித்தரப்படும், ஜமனாமரத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் மாநில சாலைகள் விரிவுப்படுத்த பணிகள் நடந்து வருகிறது முழுவதுமாக வன பகுதி என்பதால் அவர்களின் அனுமதியும் தேவை.

 சுங்கசாவடிகள் தேவையில்லாதவைகளை மூட வேண்டுமென நாங்கள் மத்திய அரசுக்கு தொடர்ந்து கடிதம் எழுதி வருகிறோம்.

 எங்களின் அழுத்தத்தின் காரணமாக தற்போது 40 சதவிகித சுங்கசாவடிகள் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார்.

  போக்குவரத்து நெரிசலை குறைக்க சுற்றுசாலைகளை அமைக்க நிலங்களை கையகப்படுத்தபட வேண்டியுள்ளது பணிகள் நிறைவடைந்த பின்னர் பணிகள் மேற்கொள்ளபடும் என்று கூறினார்.