எளிமையாக தொடர்பு கொள்ள என்னை கவுன்சிலராக தேர்வு செய்யுங்கள்! அ.தி.மு.க.வேட்பாளர் ஜி.கே. முரளி வேண்டு கோள்!

வி.சேகர்,
எளிமையாக தொடர்பு கொள்ள என்னை கவுன்சிலராக தேர்வு செய்யுங்கள் என்று அ.தி.மு.க.வேட்பாளர் ஜி.கே.முரளி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
வேலூர் மாநகராட்சியின் 26 ஆவது வட்ட செயலாளராக உள்ள அவர், சத்துவாச்சாரி பகுதி இரண்டுக்குட்பட்ட பகுதியில் தான் குடியிருந்து வருகிறார். நடைபெற இருக்கும் நகர்புற உள்ளாட்சி தேர்தலில் இதே வார்டில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறார்.
அதற்கான வேட்பு மனுவை இன்று அவர் வேலூர் மாநகராட்சியின், சத்துவாச்சாரி மணடல அலுவலகத்தில் தாக்கல் செய்தார்.
அவருடன் சமூக சேவகரும், முன்னாள் எல்.ஐ.சி அலுவலரும், விருதுகள் பல பெற்றவருமான சி.பி.தேசி,P.தணிகை வேலன், பிரேம்குமார், த.மா.க.தலைவர் கீதா தேசபக்தன், அண்ணாதுரை,சேட்டு,ராமு உள்ளிட்டவர்கள் இருந்தனர்.
மனு தாக்கலுக்கு பின்னர் பேசிய முரளி இந்த வார்டு மக்களுடன் நான் நேரடியாக தொடர்பு வைத்துக் கொண்டுள்ளவன் என்பதை என் வார்டு மக்கள் அறிவார்கள்.
புரட்சித்தலைவி அம்மாவின் நல்லாசியுடன் எனக்கு கட்சித் தலைமை ஓ.பி.எஸ், இ.பி.எஸ். மற்றும் மாநகர மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.கே. அப்பு ஆகியோர் வாழ்த்தி சீட்டு கொடுத்துள்ளார்கள்.
வார்டில் உள்ள குறைகள் அனைத்துமே எனக்கு நன்கு தெரியும்.
நான் அம்மா இ.சேவை மையம் என்கிற பெயரில் இலவசமாக பல சேவைகளை மக்களுக்கு செய்து கொண்டு வருகின்றேன்.
இதற்கு முன் நான் கவுன்சிலராக இல்லாத போதிலும், என்னுடைய சொந்த செலவில் குப்பைகளை அள்ளுவது, சாக்கடைகளை சீரமைப்பது போன்ற பணிகளையும், கொரோனா காலத்தில் சுழற்சி முறையில் தொடர்ச்சியாக கபசுர நீர் விநீயோகமும் செய்துள்ளேன்.
அப்படியிருக்க என்னை கவுன்சிலராக தேர்வு செய்து மக்கள் பணியாற்றிட வாய்ப்பளியுங்கள் என்று இதன் மூலம் வாக்காளர்களை கேட்டுக் கொள்கிறேன்.
வார்டு மக்கள் கூப்பிட்ட குரலுக்கு நான் ஓடோடி வருவேன் என்பது அனைவரும் அறிந்ததே.
ரொம்பவே சிம்பிளாக சொல்ல வேண்டுமானால் 26 வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் இது போன்ற பணிகளை செய்வதற்காகவே இரண்டு அலுவலகங்கள் வைத்துள்ளேன்.
வார்டில் எந்த குறைகள் இருந்தாலும் அங்கு தெரிவித்தாலே போதும். நேரில் வர இயலாதவர்கள் என்னை 24 மணிநேரத்தில் எப்போது வேண்டுமானாலும் தொடர்பு கொண்டு வேலை வாங்கலாம்.
புரட்சித்தலைவி அம்மா மீது ஆணையிட்டு சொல்கிறேன், மக்கள் ஆதரவுடன் நான் கவுன்சிலராக வெற்றி பெற்ற பின்னர் தொடர்பு எல்லைக்கு அப்பால் செல்லவே மாட்டேன். எப்போதும் போலவே உங்களுடன் இருப்பேன்.
மேலும்,ஸ்மார்ட் சிட்டி பணிகளால் சேதமடைந்துள்ள பகுதிகளை, மக்கள் ஆதரவுடன் நான் கவுசிலராக ஆனதும் உடனடியாக சீராக்குவேன் என்றார்.
இந்நிலையில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் அ.தி.மு.க.வேட்பாளர் ஜி.கே.முரளி வெற்றி பெற பலரும் வாழ்த்து தெரித்து வருகிறார்கள்.